எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

 இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை கோழையகற்றியாகவும் பசியுண்டாக்கியாகவும் பால் புண் உண்டாகும் தன்மையுடையதாகவும் செயல்படுகிறது.

எருக்கம் பழுப்புச்சாறு 2௦௦ மில்லி எடுத்து ஒரு சட்டியிலிட்டு வெள்ளைப்பூண்டு 5௦ கிராம், இலவங்கப்பட்டை 5௦ கிராம், வசம்பு 5௦ கிராம். பெரும்காயம் 5௦ கிராம் பொடித்துப் போட்டு 2௦௦ மில்லி நல்லெண்ணெயும் விட்டுக் கலக்கி பதமாய்க் காய்ச்சி வடித்து காதில் இரண்டு, மூன்றுத் துளிகள் விட்டுவர காதில் சீழ்வடிதல் நீங்கிக் குணமாகும்.

எருக்கு இலைசாற்றை எடுத்து 3௦ மில்லி விளக்கெண்ணெயில் 3 துளிவிட்டு உள்ளுக்குக் கொடுக்க இறுகிப்போன மலம் இளகும்.

எருக்கிலைச்சாற்றை 3 துளியளவு எடுத்து 1௦ துளித் தேனுடன் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

எருக்கன் பளுப்பைக் கொண்டு வந்து அதை வேப்ப எண்ணெயில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால், எந்தவகையான வீக்கமானாலும் வாடிவிடும்.

காலில் குத்தி வெளியேறாத முள்களை வெளியேற்ற தினசரி அந்த இடத்தில் எருக்கன் பாலை விட்டு வந்தால் முள் தானே வெளியில் வந்துவிடும்.

(எருக்கு மருந்து குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஆகாது. இம்மருந்தினால் ஏதேனும் வேதனைகள் இருப்பின் நல்லெண்ணெய் அதற்கு முறிவாகப் பயன்படுத்தலாம்.)

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
– டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...