எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

 இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை கோழையகற்றியாகவும் பசியுண்டாக்கியாகவும் பால் புண் உண்டாகும் தன்மையுடையதாகவும் செயல்படுகிறது.

எருக்கம் பழுப்புச்சாறு 2௦௦ மில்லி எடுத்து ஒரு சட்டியிலிட்டு வெள்ளைப்பூண்டு 5௦ கிராம், இலவங்கப்பட்டை 5௦ கிராம், வசம்பு 5௦ கிராம். பெரும்காயம் 5௦ கிராம் பொடித்துப் போட்டு 2௦௦ மில்லி நல்லெண்ணெயும் விட்டுக் கலக்கி பதமாய்க் காய்ச்சி வடித்து காதில் இரண்டு, மூன்றுத் துளிகள் விட்டுவர காதில் சீழ்வடிதல் நீங்கிக் குணமாகும்.

எருக்கு இலைசாற்றை எடுத்து 3௦ மில்லி விளக்கெண்ணெயில் 3 துளிவிட்டு உள்ளுக்குக் கொடுக்க இறுகிப்போன மலம் இளகும்.

எருக்கிலைச்சாற்றை 3 துளியளவு எடுத்து 1௦ துளித் தேனுடன் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.

எருக்கன் பளுப்பைக் கொண்டு வந்து அதை வேப்ப எண்ணெயில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால், எந்தவகையான வீக்கமானாலும் வாடிவிடும்.

காலில் குத்தி வெளியேறாத முள்களை வெளியேற்ற தினசரி அந்த இடத்தில் எருக்கன் பாலை விட்டு வந்தால் முள் தானே வெளியில் வந்துவிடும்.

(எருக்கு மருந்து குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஆகாது. இம்மருந்தினால் ஏதேனும் வேதனைகள் இருப்பின் நல்லெண்ணெய் அதற்கு முறிவாகப் பயன்படுத்தலாம்.)

நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
– டாக்டர். மு. போத்தியப்பன்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...