இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை கோழையகற்றியாகவும் பசியுண்டாக்கியாகவும் பால் புண் உண்டாகும் தன்மையுடையதாகவும் செயல்படுகிறது.
எருக்கம் பழுப்புச்சாறு 2௦௦ மில்லி எடுத்து ஒரு சட்டியிலிட்டு வெள்ளைப்பூண்டு 5௦ கிராம், இலவங்கப்பட்டை 5௦ கிராம், வசம்பு 5௦ கிராம். பெரும்காயம் 5௦ கிராம் பொடித்துப் போட்டு 2௦௦ மில்லி நல்லெண்ணெயும் விட்டுக் கலக்கி பதமாய்க் காய்ச்சி வடித்து காதில் இரண்டு, மூன்றுத் துளிகள் விட்டுவர காதில் சீழ்வடிதல் நீங்கிக் குணமாகும்.
எருக்கு இலைசாற்றை எடுத்து 3௦ மில்லி விளக்கெண்ணெயில் 3 துளிவிட்டு உள்ளுக்குக் கொடுக்க இறுகிப்போன மலம் இளகும்.
எருக்கிலைச்சாற்றை 3 துளியளவு எடுத்து 1௦ துளித் தேனுடன் கலந்து உள்ளுக்குக் கொடுக்க வயிற்றுப் புழுக்கள் வெளியாகும்.
எருக்கன் பளுப்பைக் கொண்டு வந்து அதை வேப்ப எண்ணெயில் வதக்கி, வீக்கமுள்ள இடத்தில் வைத்துக் கட்டி வந்தால், எந்தவகையான வீக்கமானாலும் வாடிவிடும்.
காலில் குத்தி வெளியேறாத முள்களை வெளியேற்ற தினசரி அந்த இடத்தில் எருக்கன் பாலை விட்டு வந்தால் முள் தானே வெளியில் வந்துவிடும்.
(எருக்கு மருந்து குழந்தைகளுக்கும் சிறுவர்களுக்கும் ஆகாது. இம்மருந்தினால் ஏதேனும் வேதனைகள் இருப்பின் நல்லெண்ணெய் அதற்கு முறிவாகப் பயன்படுத்தலாம்.)
நன்றி : முடி முதல் அடிவரை மூலிகை மருத்துவம்
– டாக்டர். மு. போத்தியப்பன்
மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ... |
கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ... |
விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.