டொமினிகா விருதை பெரும் பிரதமர் நரேந்திர மோடி

காமன்வெல்த் ஆஃப் டொமினிகா, தனது உயரிய தேசியவிருதான டொமினிகா விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

COVID-19 தொற்றின்போது, 2021ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தியா, டொமினிகாவுக்கு 70,000டோஸ் ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பூசியை அன்பளிப்பாக வழங்கியது.
அத்துடன், டொமினிகாவின் சுகாதாரம், கல்வி மற்றும் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு உதவிகளை அளித்திருந்தது.

இந்த உதவிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், டொமினிகா தனது நாட்டின் உயரியவிருதை பிரதமர் மோடிக்கு வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.

டொமினிக்காவின் பிரதமர் வெளியிட்ட அறிக்கை;

இது தொடர்பாக, டொமினிகாவின் பிரதமர் ரூஸ்வெல்ட் ஸ்கெர்ரிட் வெளியிட்ட அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி, டொமினிகாவின் உண்மையான நண்பர். கோவிட் தொற்றின்போது, சரியானநேரத்தில் அவர் நமக்கு உதவிசெய்தார். இதுவரையிலான அவரது ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இருநாடுகளுக்கு இடையேயான உறவின் வலிமையை வெளிப்படுத்தும் விதமாகவும், நாங்கள் எங்கள் நாட்டின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்க இருக்கின்றோம்” என்றார்.

மேலும், இருநாடுகளுக்கு இடையேயான உறவு மேலும் வலுப்பட வேண்டும் என்று அவர் விரும்புவதாகவும், நவம்பர் 19 முதல் 21 வரை கயானாவின் ஜார்ஜ்டவுனில் நடைபெறும் இந்தியா-காரிகாம் உச்சி மாநாட்டின் போது காமன்வெல்த் தலைவர் டொமினிகா சில்வானி பர்ட்டன், இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கரு கூடாமல் போவதற்கு யார் காரணம்?

கரு கூடுவதற்கு 40% ஆண்களும், 40% பெண்களும், 20% இருவரும் காரணம். இதில் ...

அல்லிப் பூவின் மருத்துவக் குணம்

அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...