‘140 கோடி இந்தியர்களுக்கு டொமினிகாவால் வழங்கப்பட்ட உயரிய விருதை அர்ப்பணிக்கிறேன்’ என பிரதமர் மோடி சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், டொமினிகாவுக்கு 70,000 டோஸ் ஆஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசியை பிரதமர் நரேந்திர மோடி வழங்கி உதவினார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும், இந்தியா – டொமினிகா நல்லுறவை வலுப்படுத்த மோடி எடுத்து வரும் முயற்சியை அங்கீகரிக்கும் விதமாகவும், நாட்டின் மிக உயரிய தேசிய விருதான டொமினிகா கவுரவ விருது, இந்திய பிரதமர் மோடிக்கு அறிவிக்கப்பட்டது.
தனது 3 நாடுகளுக்கான பயணத்தின் இறுதி கட்டமாக, கயானாவிற்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு நடந்து உச்சிமாநாட்டின் போது, டொமினிகாவின் ஜனாதிபதி சில்வானி பர்ட்டனா, பிரதமர் மோடிக்கு உயரிய தேசிய விருதான டொமினிகா கவுரவ விருது வழங்கி கவுரவித்தார்.
இந்த புகைப்படங்களை சமூகவலைதளத்தில் பகிர்ந்து பிரதமர் மோடி கூறியிருப்பதாவது:
டொமினிகாவால் மிக உயர்ந்த தேசிய விருதை வழங்கியதற்காக பெருமைப்படுகிறேன். 140 கோடி மக்களுக்கு இதை அர்ப்பணிக்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
‘இந்த விருது, கோவிட் தொற்றுவின் போது டொமினிகாவிற்கு பிரதமர் மோடி செய்த உதவிகள், இந்தியா-டொமினிகா ஆகிய இரு நாடுகளின் உறவுகளை வலுப்படுத்தவும், விருது வழங்கப்பட்டுள்ளது’ என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ... |
பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ... |