புதிய சட்டங்கள் மக்களை பாதுகாக்கும் – பிரதமர் மோடி

பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இருந்து பயன்படுத்தப்படும், ஐ.பி.சி., எனப்படும் இந்திய தண்டனை சட்டம், சி.ஆர்.பி.சி., எனப்படும் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம் ஆகியவற்றுக்கு மாற்றாக மூன்று புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷ்ய அபினியம்’ ஆகிய இந்த மூன்று புதிய கிரிமினல் சட்டங்கள், ஜூலை 1 முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த மூன்று சட்டங்களையும் முழுமையாக நடைமுறைபடுத்தியுள்ளது, சண்டிகர் யூனியன் பிரதேசம்.

இதன் வாயிலாக மூன்று சட்டங்களையும் முழுமையாக செயல்படுத்தியுள்ள முதல் நிர்வாக பிரிவாக சண்டிகர் விளங்குகிறது. இது தொடர்பாக நேற்று நடந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

நம் நாட்டை ஆக்கிரமித்து ஆட்சி புரிந்து வந்த பிரிட்டிஷ் அரசுக்கு, 1857ல் நடந்த சிப்பாய் கலகம் பெரும் கலக்கத்தை அளித்தது. அதையடுத்து, இந்திய மக்களை அடிமைகளாக வைத்திருப்பதற்காக கொண்டு வரப்பட்டவையே இந்த சட்டங்கள். இதன்படி, 1860ல் இந்திய தண்டனை சட்டம் வந்தது. அதைத் தொடர்ந்து மற்ற சட்டங்கள் வந்தன. இந்த சட்டங்களின் நோக்கம், இந்திய மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் செய்வது, சுரண்டுவதே.

சுதந்திர போராட்டத்துக்குப் பின், 1947ல் நமக்கு விடுதலை கிடைத்தது. பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து விடிவு ஏற்படும் என, மக்கள் பெரும் நம்பிக்கையுடன் இருந்தனர். ஆனாலும், காலனியாதிக்க தாக்கம் தொடர்ந்தது.

மக்களுக்கு எதிராக அட்டூழியங்கள் செய்யவும், சுரண்டவும் பிரிட்டிஷார் கொண்டு வந்த சட்டங்கள் தொடர்ந்தன. மக்களை அடிமைகளாகவே வைத்திருக்கும் நோக்கத்துடன், அவை மாற்றப்படவில்லை.

நம் நாடு, வளர்ச்சி அடைந்த நாடு என்ற இலக்குடன் பயணிக்கிறது. இந்த நேரத்தில், பழைய கிரிமினல் சட்டங்களுக்கு மாற்றாக இந்த மூன்று புதிய சட்டங்கள் அமலுக்கு வந்துள்ளன. இதை, முதலில் முழுமையாக செயல்படுத்தியுள்ள சண்டிகர், மற்ற மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு வழிகாட்டியாக உள்ளது.

இந்த புதிய சட்டங்கள் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதுடன், நீதி விரைவாக கிடைப்பதை உறுதி செய்யும்.புதிய சட்டங்கள் அமல்படுத்தியதன் வாயிலாக, காலனி ஆதிக்க மனநிலை மாற்றப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...