இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி

அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு விவகாரம், நம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரையே ஸ்தம்பிக்க வைத்துஉள்ளது.

அதுமட்டுமின்றி, பெகாசஸ் உளவு, ஹிண்டன்பர்க் அறிக்கை உட்பட, நம் பார்லி., கூட்டத் தொடருக்கு முன் இதுபோன்ற அறிக்கைகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடுவதில் மிகப்பெரிய சதி இருப்பதாக, பா.ஜ., — எம்.பி.,க்கள் பார்லிமென்டில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அமெரிக்க, ‘டீப் ஸ்டேட்’ அமைப்பு, அந்நாட்டின் சில செய்தியாளர்கள் குழு மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுலுடன் கூட்டு சேர்ந்து நம் நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டு உள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த, ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும், புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்புடன் கைகோர்த்து, அதானி நிறுவனத்தை குறிவைத்தும், பிரதமர் மோடியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இந்த சதியில் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு நேரடியாக சம்பந்தம் உள்ளது. இந்த ஓ.சி.சி.ஆர்.பி., அமைப்புக்கு அமெரிக்க அரசு நேரடியாக பண உதவிகளை செய்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க, ‘டீப் ஸ்டேட்’ சதிக்கு, ஓ.சி.சி.ஆர்.பி., கேடயமாக பயன்படுத்தப்படுகிறது.இதை பிரான்ஸ் நாட்டு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. சில அமெரிக்க நிறுவனங்களும், அந்நாட்டு கோடீஸ்வர தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் ராகுல் இணைந்து இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் கூட்டுசதி செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிக ...

கல்பாக்கம் அணுசக்தி விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு கல்பாக்கத்தில் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முன்மாதிரி வேக ஈனுலை, ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத ...

“மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்த மாநிலங்கள் மக்களவை தொகுதிகளை இழக்காது” – பிரதமர் மோடி மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்கள் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கையை ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உரு ...

உலக சுகாதார தினம் : “பூவுலகை உருவாக்க உழைக்கும் அனைவருக்கும் நன்றி” – பிரதமர் மோடி உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) தொடங்கப்பட்ட உலக சுகாதார ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே ...

இந்தியாவுக்கு முதலிடம் என்பதே எங்களது தாரக மந்திரம்: பாஜக 47-வது நிறுவன தினத்தில் பிரதமர் மோடி பெருமிதம் ​பாஜக​வின் 47-வது நிறுவன நாளை முன்​னிட்​டு, நாடு முழு​வதும் ...

மருத்துவ செய்திகள்

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

டீ யின் மருத்துவ குணம்

டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ...