இந்திய வளர்ச்சியை சீர்குலைக்க அமெரிக்க வெளியுறவுத்துறை சதி

அதானி கிரீன் எனர்ஜி’ நிறுவனத்தின் மீது அமெரிக்க நீதித்துறை சுமத்தியுள்ள குற்றச்சாட்டு விவகாரம், நம் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரையே ஸ்தம்பிக்க வைத்துஉள்ளது.

அதுமட்டுமின்றி, பெகாசஸ் உளவு, ஹிண்டன்பர்க் அறிக்கை உட்பட, நம் பார்லி., கூட்டத் தொடருக்கு முன் இதுபோன்ற அறிக்கைகளை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிடுவதில் மிகப்பெரிய சதி இருப்பதாக, பா.ஜ., — எம்.பி.,க்கள் பார்லிமென்டில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினர்.

இந்நிலையில், பா.ஜ., செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
அமெரிக்க, ‘டீப் ஸ்டேட்’ அமைப்பு, அந்நாட்டின் சில செய்தியாளர்கள் குழு மற்றும் காங்கிரஸ் எம்.பி., ராகுலுடன் கூட்டு சேர்ந்து நம் நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்கும் சதியில் ஈடுபட்டு உள்ளனர்.

அமெரிக்காவைச் சேர்ந்த, ஓ.சி.சி.ஆர்.பி., எனப்படும், புலனாய்வு பத்திரிகையாளர்களுக்கான அமைப்புடன் கைகோர்த்து, அதானி நிறுவனத்தை குறிவைத்தும், பிரதமர் மோடியுடன் அவருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர். இந்த சதியில் அமெரிக்க வெளியுறவுத் துறைக்கு நேரடியாக சம்பந்தம் உள்ளது. இந்த ஓ.சி.சி.ஆர்.பி., அமைப்புக்கு அமெரிக்க அரசு நேரடியாக பண உதவிகளை செய்து வருகிறது.

இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க, ‘டீப் ஸ்டேட்’ சதிக்கு, ஓ.சி.சி.ஆர்.பி., கேடயமாக பயன்படுத்தப்படுகிறது.இதை பிரான்ஸ் நாட்டு செய்தி நிறுவனமும் உறுதி செய்துள்ளது. சில அமெரிக்க நிறுவனங்களும், அந்நாட்டு கோடீஸ்வர தொழிலதிபர் ஜார்ஜ் சோரோஸ் மற்றும் ராகுல் இணைந்து இந்தியாவுக்கு எதிரான தாக்குதல்களில் கூட்டுசதி செய்து வருகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...