விஜய் மல்லையா, நீரவ் மோடி சொத்துக்களை விற்றதில் 15,000 கோடி பணம் மீட்பு

” வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணம் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது”, என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

லோக்சபாவில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மோசடியாளர்களிடம் இருந்து ரூ.22, 280 கோடி பணத்தை அமலாக்கத்துறை வெற்றிகரமாக மீட்டு உள்ளது. அதில் முக்கியமான வழக்குகளை மட்டும் கூறுகிறேன்.

விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.14,131.6 கோடி வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

நீரவ் மோடி சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.1,052. 58 கோடியும்

தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் கழக ஊழல் தொடர்பாக பறிமுதல் சொத்துகள் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.17.47 கோடியும் வங்கிகளுக்கு திரும்பியது.

எஸ்ஆர்எஸ் நிறுவனங்கள்- ரூ.20.15 கோடி

ரோஸ்வேலி நிறுவனம் – ரூ.19.40 கோடி

சூர்யா பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் – ரூ.185.13 கோடி

நவேரா சேக் உள்ளிட்டவர்கள் – ரூ.226 கோடி

நாயுடு அம்ருதேஷ் ரெட்டி- ரூ.12.73 கோடி

மெகுல் சோக்சி – ரூ.2,565.90 கோடி

நபிசா ஓவர்சீஸ் உள்ளிட்டவர்கள்- ரூ.25.38 கோடி வங்கிகளுக்கு திரும்பி உள்ளது.

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரையும் விடவில்லை என்பது முக்கியமான விஷயம். வங்கிகளில் இருந்து சென்ற பணம், மீண்டும் வங்கிகளுக்கே திரும்பும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

பல வங்கிகளில் கடன் வாங்கி ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் உள்ளார். அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார், நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மெகுல் சோக்சி, தற்போது ஆண்டிகுவாவில் உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு க ...

டீப்பேக் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் – பிரதமர் மோடி பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்த ...

பிரான்ஸ் அதிபர் அளித்த விருந்தில் பிரதமர் மோடி மகிழ்ச்சி பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உய ...

விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது ? அண்ணாமலை கேள்வி 7,360 கவுரவ விரிவுரையாளர்களுக்கு சம்பள உயர்வு எப்போது என்று ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ...

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ் ...

தைப்பூச திருவிழா அண்ணாமலை வாழ்த்து அண்ணாமலை வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி; உலகெங்கும் உள்ள தமிழ் ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றா ...

சூரிய மின் உற்பத்தியில் மூன்றாவது இடம் – பிரதமர் மோடி உலகளவில் சூரிய மின் உற்பத்தியில் இந்தியா 3வது இடத்தை ...

மருத்துவ செய்திகள்

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...