விஜய் மல்லையா, நீரவ் மோடி சொத்துக்களை விற்றதில் 15,000 கோடி பணம் மீட்பு

” வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்து வெளிநாடுகளுக்கு தப்பியோடிய விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டோரின் சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த பணம் வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது”, என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

லோக்சபாவில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மோசடியாளர்களிடம் இருந்து ரூ.22, 280 கோடி பணத்தை அமலாக்கத்துறை வெற்றிகரமாக மீட்டு உள்ளது. அதில் முக்கியமான வழக்குகளை மட்டும் கூறுகிறேன்.

விஜய் மல்லையாவின் சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.14,131.6 கோடி வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

நீரவ் மோடி சொத்துகளை விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.1,052. 58 கோடியும்

தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் கழக ஊழல் தொடர்பாக பறிமுதல் சொத்துகள் விற்பனை செய்ததில் கிடைத்த ரூ.17.47 கோடியும் வங்கிகளுக்கு திரும்பியது.

எஸ்ஆர்எஸ் நிறுவனங்கள்- ரூ.20.15 கோடி

ரோஸ்வேலி நிறுவனம் – ரூ.19.40 கோடி

சூர்யா பார்மாசூட்டிகல்ஸ் லிமிடெட் – ரூ.185.13 கோடி

நவேரா சேக் உள்ளிட்டவர்கள் – ரூ.226 கோடி

நாயுடு அம்ருதேஷ் ரெட்டி- ரூ.12.73 கோடி

மெகுல் சோக்சி – ரூ.2,565.90 கோடி

நபிசா ஓவர்சீஸ் உள்ளிட்டவர்கள்- ரூ.25.38 கோடி வங்கிகளுக்கு திரும்பி உள்ளது.

பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாரையும் விடவில்லை என்பது முக்கியமான விஷயம். வங்கிகளில் இருந்து சென்ற பணம், மீண்டும் வங்கிகளுக்கே திரும்பும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.

பல வங்கிகளில் கடன் வாங்கி ரூ.9 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்த பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா தற்போது லண்டனில் உள்ளார். அதேபோல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி நீரவ் மோடி மற்றும் அவரது உறவினரான மெகுல் சோக்சி ரூ.13 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடி செய்தார், நீரவ் மோடி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். மெகுல் சோக்சி, தற்போது ஆண்டிகுவாவில் உள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

இரட்டை பேய் மருட்டின் மருத்துவக் குணம்

இதை பல ஊர்களில் பல பெயர்களில் வழங்குகிறார்கள். இது வெதுப்படக்கி, பேய்மருட்டி பேய்வருட்டி ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...