விவசாயிகள் குறித்து காங்கிரஸ் முதலைக்கண்ணீர் வடிக்கிறது -சீதாராமன் பதிலடி

விவசாயிகள் குறித்து காங்., முதலைக் கண்ணீர் வடிக்கிறது என லோக்சபாவில் , மத்திய பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய நிர்மலா சீதாராமன் கூறினார்.
பட்ஜெட் மீதான விவாதத்திற்கு பதிலளித்து நிர்மலா சீதாராமன் பேசியதாவது
*தற்போது தாக்கல் ஆன பட்ஜெட் மிஷன் 2047 க்கான முதல் படியாகும்.
*பட்ஜெட்டின் மொத்த மதிப்பு ரூ.48.21 லட்சம் கோடி
*கோவிட் காலத்தில் மத்திய அரசின் துரித நடவடிக்கையால் மீண்டெழுந்தோம்
*சமூக நலன் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு
*2014 ஐ விட விவசாய துறைக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டு உள்ளது.
*சுகாதாரத்துறைக்கு 1.36 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*பட்ஜெட்டில் எந்த துறைக்கும் நிதி குறைக்கப்படவில்லை. கல்விக்கான ஒதுக்கீடும் உயர்த்தப்பட்டு உள்ளது.
*நகர்ப்புற வளர்ச்சிக்கான ஒதுக்கீடும் அதிகரிக்கப்பட்டு உள்ளது.
*இந்தியாவை வேகமாக வளரும் பொருளாதார நாடாக மக்கள் மாற்றி உள்ளனர்.
*நிதிப்பற்றாக்குறை, நாட்டின் ஜிடிபி.,யில் 4.9 சதவீதமாக இருக்கும்.
*காஷ்மீரை மேம்படுத்த தனிக்கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. 42,277 கோடி ரூபாய் காஷ்மீர் மாநிலத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*காஷ்மீரில் வேலைவாய்ப்பின்மை 5.7 சதவீதமாக குறைந்துள்ளது.
*2047 க்குள் வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதே எங்களது நோக்கம்.
*இரண்டு மாநிலங்களுக்கு மட்டுமே கவனம் செலுத்தப்பட்டு உள்ளதாக கூறுவது தவறு
*பட்ஜெட்டில் பெயர் அறிவிக்காததால், அந்த மாநிலத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என அர்த்தமில்லை.
*தவறான புரிதலோடு சிலர் கருத்து வெளியிடுகின்றனர்.
*தவறான கருத்துகளை பரப்பும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் ஈடுபட்டு உள்ளன.
*சிலர் கூறிய தவறான கருத்துகள் எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
*ஐமுகூ ஆட்சி பட்ஜெட்டிலும் ஒவ்வொரு மாநிலத்தின் பெயர் குறிப்பிடப்படவில்லை.
*2004-05 பட்ஜெட்டில் 17 மாநிலங்களின் பெயர் இல்லை. அதற்காக அந்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கவில்லையா
*2006-07 பட்ஜெட்டில் 13 மாநிலங்களின் பெயர் இல்லை.
*2009- 2010 ஆண்டுகளில் 2 மாநிலங்களின் பெயர் மட்டுமே இருந்தது.
*நீங்கள் செய்தால் தவறில்லை. நாங்கள் செய்தால் மட்டும் தவறா
*மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முனைப்பு காட்டுகின்றன
*பல்வேறு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கேரளாவிற்கு பெரிய நெடுஞ்சாலை திட்டம்அறிவிப்பு
*கேரளாவின் விழிஞம் துறைமுகம் அதானிக்கு ஒப்படைக்கப்பட்ட போது யாரும் ஒன்றும் சொல்லவில்லை. லோக்சபாவில் ஏ1 ஏ2 எனக்கூறியவர் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை
*ஐமுகூ ஆட்சியில் வேலைவாய்ப்பு குறித்து காங்., விவாதிக்கவில்லை.
* விவசாயிகளை வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றன.
*குறைந்தபட்ச ஆதார விலையை ஐமுகூ., ஏற்றுக் கொள்ளவில்லை.
*விவசாயிகள் குறித்து காங்கிரஸ் முதலைக் கண்ணீர் வடிக்கிறது
* ஐமுகூ., ஆட்சியின் போது வேலைவாய்ப்பின்மை குறித்து காங்கிரஸ் விவாதிக்க மறுத்தது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

பால் தரும் தாய்மார்கள் உணவில் கவனிக்க வேடியவை

பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ...

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...