வாக்குறுதியை நிறைவேற்றியவர் வாஜ்பாய் – சம்பாய் சோரன் புகழாரம்

மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு அமையாமல் இருந்திருந்தால், ஜார்க்கண்டில் மக்கள் நீண்ட காலம் போராட வேண்டி இருந்திருக்கும் என்று முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் கூறினார்.

இன்று மறைந்த வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் விழாவில், அவருக்கு பா.ஜ., தலைவரும் முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மத்தியில் ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்படாமலிருந்திருந்தால், மாநில மக்கள் இன்னும் பல ஆண்டுகள் காத்திருந்து போராட வேண்டியிருக்கும். மேலும் பல தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்திருக்கும்.

பிரிக்கப்படாத பீகாரின் ஆர்.ஜே.டி., அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தனி ஜார்கண்ட் உருவாக்கும் வாக்குறுதியை முன்னாள் பிரதமர் நிறைவேற்றினார்.

1999ம் ஆண்டு தும்காவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அடல்ஜி, ‘எனது ஆட்சி அமைக்க உதவினால், தனி மாநிலத்தை பரிசளிப்பேன்’ என்று உறுதியளித்தார். மேலும் ஜார்க்கண்ட் மக்களின் பல தசாப்த கால இயக்கத்தை கவுரவித்தார்.

இவ்வாறு சம்பாய் சோரன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ ...

‘தேர்தல் யாத்திரை’: பீகாரில் ரூ.7,200 கோடி திட்டங்கள். பிரதமர் நரேந்திர மோடி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாள ...

சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளியை கைது செய்யாதது ஏன்? நயினார் நாகேந்திரன் கேள்வி ஒரு 10 பவுன் நகைக்காக தனிப்படை அமைத்து எவ்வித ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல ...

‘தலித்’ பெயரை வைத்து அரசியல் செய்யும் காங்கிரஸ்;பிரதமர் மோடி குற்றச்சாட்டு பீஹாரில் ரூ.7,200 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்ப ...

லடாக்கில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்பு சோதனை வெற்றி; இந்திய ராணுவம் பெருமிதம் லடாக்கில் சுமார் 15,000 அடி உயரத்தில் ஆகாஷ் வான் ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உ ...

ரூ.24,000 கோடியில் விவசாயிகளுக்கு உதவும் புதிய திட்டம்: ஒப்புதல் அளித்தது மத்திய அரசு விவசாயிகளுக்கு உதவும் ரூ.24 ஆயிரம் கோடி தன் தானிய ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்பட ...

பாரம்பரிய சமையற்கலையை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய இளையோர் சமையல் போட்டி தொடக்கம் மத்திய சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து பிஎச்டி வர்த்தக மற்றும் ...

மருத்துவ செய்திகள்

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கண்டங்கத்திரி இலையின் மருத்துவக் குணம்

கோழையகற்றியாகவும், சிறுநீர் பெருக்கியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.