வாக்குறுதியை நிறைவேற்றியவர் வாஜ்பாய் – சம்பாய் சோரன் புகழாரம்

மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான அரசு அமையாமல் இருந்திருந்தால், ஜார்க்கண்டில் மக்கள் நீண்ட காலம் போராட வேண்டி இருந்திருக்கும் என்று முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் கூறினார்.

இன்று மறைந்த வாஜ்பாயின் 100வது பிறந்தநாள் விழாவில், அவருக்கு பா.ஜ., தலைவரும் முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய்க்கு மத்தியில் ஆட்சி அமைக்க அனுமதி வழங்கப்படாமலிருந்திருந்தால், மாநில மக்கள் இன்னும் பல ஆண்டுகள் காத்திருந்து போராட வேண்டியிருக்கும். மேலும் பல தியாகங்களைச் செய்ய வேண்டி இருந்திருக்கும்.

பிரிக்கப்படாத பீகாரின் ஆர்.ஜே.டி., அரசின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, தனி ஜார்கண்ட் உருவாக்கும் வாக்குறுதியை முன்னாள் பிரதமர் நிறைவேற்றினார்.

1999ம் ஆண்டு தும்காவில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய அடல்ஜி, ‘எனது ஆட்சி அமைக்க உதவினால், தனி மாநிலத்தை பரிசளிப்பேன்’ என்று உறுதியளித்தார். மேலும் ஜார்க்கண்ட் மக்களின் பல தசாப்த கால இயக்கத்தை கவுரவித்தார்.

இவ்வாறு சம்பாய் சோரன் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

இனிப்பு

இயற்கையான பழ உணவு உடலுக்குத் தீங்கு விளைவிக்காது. நீரிழிவு உள்ளவர்கள் மிகவும் குறைவாகப் ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...