பாஜக வில் மட்டும் தான் பூத் பணியாளர்கள் பிரதமாகும் வாய்ப்பு – விஜயேந்திரா

”பா.ஜ.,வில் மட்டும் தான் பூத் பணியாளர்கள் பிரதமராகும் வாய்ப்பு உள்ளது,” என, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயி 100வது பிறந்த நாளை, ‘நல்லாட்சி தினமாக’ பா.ஜ., கொண்டாடி வருகிறது. இதையொட்டி, கட்சி அலுவலகத்தில் வாஜ்பாயி புகைப்பட கண்காட்சியை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா துவக்கி வைத்தார்.

பின், விஜயேந்திரா பேசியதாவது:

கட்சியின் மூத்த தலைவர்கள் எடியூரப்பா, மறைந்த மத்திய அமைச்சர் அனந்த குமார் ஆகியோரின் கடின முயற்சியால், கர்நாடகாவில் பா.ஜ., வளர்ந்து பலத்துடன் இருக்கிறது. இவர்களுக்கு பின்னால், லட்சக்கணக்கான தொண்டர்கள், தங்களின் நேரம், பணத்தை துறந்து பணியாற்றினர். பா.ஜ., வளர்ந்துள்ளதை கட்சியின் கட்டடத்தை பார்த்தாலே தெரியும். ஆனால் இதற்கான அடித்தளம் அமைத்ததை பார்க்க முடியாது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி, முன்னாள் துணை பிரதமர் அத்வானி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ., தேசிய தலைவர் நட்டா ஆகியோரை நினைவில் கொள்ள வேண்டும்.

பா.ஜ.,வில் மட்டுமே பூத் அளவிலான ஊழியரும் கூட, நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமராகும் வாய்ப்பு உள்ளது. பிரதமர் மோடியின் நடவடிக்கையால், வாஜ்பாயின் பிறந்த நாளை, ‘நல்லாட்சி தினமாக’ கொண்டாடுகிறோம்.

கர்நாடகாவில் 1999ல் ஜே.எச்.பாட்டீல் தலைமையிலான அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த எடியூரப்பா தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. இப்போராட்டத்தில், வாஜ்பாயியும் பங்கேற்றார்.

அதுபோன்று ஹூப்பள்ளியில் நடந்த போராட்டத்தில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் கூடியதை பார்த்த வாஜ்பாய், ஆச்சரியமடைந்தார். புதுடில்லிக்கு புறப்படும் முன்பு, எடியூரப்பாவை கட்டி அணைத்து வாழ்த்துத் தெரிவித்தார். இத்தகைய தலைவரை, எங்கும் பார்க்க முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...