அனைவருக்குமான ஒரே அரசை வழங்க ப.ஜ.க, உறுதியாக உள்ளது – அமித்ஷா பேச்சு

“நாட்டில் பா.ஜ., இருக்கும் வரை, மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு சிறுபான்மையினருக்கு கிடைக்காது,” என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.

ஜார்க்கண்டில், முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மொத்தம் 81 சட்டசபை தொகுதிகளுடைய இங்கு, இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.

எச்சரிக்கை

இன்று, 43 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள நிலையில், மீதமுள்ள 38 தொகுதிகளில், வரும் 20ல் தேர்தல் நடக்கிறது. இந்நிலையில், ஜார்க்கண்டின் பலமு மாவட்டத்தில் நேற்று நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில், அக்கட்சி மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது:

இட ஒதுக்கீடு பற்றி காங்., பேசுகிறது. அரசியலமைப்பில், மதத்தின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க எந்த பிரிவும் இல்லை. எந்தவொரு மதத்திற்கும் இட ஒதுக்கீடு வழங்க முடியாது.

மஹாராஷ்டிராவில், முஸ்லிம்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, காங்., தலைவர்களிடம் உலமாக்கள் குழு கோரிக்கை மனு அளித்தனர். இதை பெற்ற காங்., தலைவர் ஒருவர், இதற்கு உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தால், பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள் மற்றும் பழங்குடியினரின் இட ஒதுக்கீடு குறைக்கப்படும். இந்த விவகாரத்தில், ஜார்க்கண்ட் மண்ணில் இருந்தே ராகுலை எச்சரிக்கிறேன்.

அவர் மனதில் என்ன சதி திட்டம் இருந்தாலும் சரி, பா.ஜ., இருக்கும் வரை, இந்த நாட்டில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு கிடைக்காது.

ஊழல்

காங்., எப்போதுமே இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு எதிராகவே செயல்படுகிறது. அவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதை ராஜிவ், இந்திரா ஆகியோர் எதிர்த்தனர். மத்திய கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்க காங்., பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

ஆனால், 2014ல் மத்தியில், பா.ஜ., அரசு அமைந்ததும், பிரதமர் மோடி அதை உடனே செயல்படுத்தினார். ஜார்க்கண்டில் உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா – காங்., கூட்டணி அரசு, நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்த அரசாக உள்ளது. இதை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேற்றி, அனைவருக்குமான அரசை வழங்க பா.ஜ., தயாராக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...