சட்ட்டசபை நெருங்கும் நேரத்தில் தி.மு.க , பைல்ஸ்-3 வெளியிடப்படும் -அண்ணாமலை

 ‘சட்டசபை நெருங்கும் நேரத்தில் தி.மு.க., பைல்ஸ்-3 வெளியிடப்படும். தி.மு.க., கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், சம்பாதித்த லாபங்கள் அம்பலப்படுத்தப்படும்’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

திருச்சி விமான நிலையத்தில், அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: டங்ஸ்டன் சுரங்க விவகாரம் தொடர்பாக வரும் டிச., 12ம் தேதி மத்திய அமைச்சர் எல்.முருகனும், நானும் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்திக்க உள்ளோம். நல்ல முடிவோடு தமிழகம் வருவோம். விவசாயிகளுக்கு சாதகமான தகவலுடன் வருவோம். டங்ஸ்டன் விவகாரத்தில் சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் நாடகம் ஆடுகிறார். தி.மு.க,., பைல்ஸ் 1 மற்றும் 2 வெளியிட்டுள்ளோம். தேர்தல் வரட்டும் அப்போது தி.மு.க., பைல்ஸ் 3 வெளியிடப்படும்.

பைல்ஸ்-3ல் கூட்டணி கட்சிகள் குறித்து கவர் பண்ணலாம் என்று இருக்கிறோம். கூட்டணி கட்சிகளும் தப்பித்து போக கூடாது. தமிழகத்தில் வரும் பல டெண்டர்கள் கூட்டணி கட்சிகள் எடுத்து கொள்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி வந்த பிறகு, 3 ஆண்டுக்கால டெண்டர் குறித்து ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். இது குறித்து 2025ம் ஆண்டு மக்கள் மன்றத்தில் வைக்க போகிறோம். பைல்ஸ் 1 மற்றும் 2ஐ விட பைல்ஸ் 3 தான் மிகப்பெரிய விஷயமாக இருக்கும். இதை மக்கள் பார்த்தாலே தெரிந்துவிடும். இவ்வளவு கோடி டெண்டரை உள்ளூர் அமைச்சரின் மச்சான் எடுத்து இருப்பது தெரிந்துவிடும்.

கூட்டணிக் கட்சிகள் எடுத்த டெண்டர்கள், சம்பாதித்த லாபங்கள் அம்பலப்படுத்தப்படும். மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை மாற்று பெயரில் தமிழக அரசு அமல்படுத்துகிறது. ஆதி திராவிடர் நலத்துறை தொழிற்பயிற்சியில் முடி திருத்துதல் உள்ளிட்டவை கற்றுத் தரப்படுகின்றன. முடி திருத்துதல் குலக்கல்வி இல்லையா? திருமாவளவனுக்கு திடீரென்று கோபம் வந்துருச்சி. விடுதலை சிறுத்தைக் கட்சியை வழிநடத்துவது யார் என்று கேட்டேன்?

கட்சியின் கண்ட்ரோல் கடந்த 15 நாட்களாக திருமாவளவன் கையில் இல்லை. நீங்கெல்லாம் எங்கள பத்தி பேசலாமா? இந்தியாவின் மிகப்பெரிய கட்சி பா.ஜ., இதனால் விடுதலை சிறுத்தைக் கட்சியோடு பா.ஜ.,வை கம்பேர் பண்ணி பேசும் அளவுக்கு கீழே போகவில்லை. 18 கோடி உறுப்பினர்கள் இருக்கும் கட்சி பா.ஜ.,. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

கருஞ்செம்பையின் மருத்துவ குணம்

கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ...

இரத்த அழுத்த நோய்

கல்யாணமுருங்கைக் கீரை, சீரகம் இரண்டையும் நெல்லிச்சாறு சேர்த்து அரைத்து தினமும் அதி காலையில் ...

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...