இந்திய இளைஞர்கள் உலக நன்மைக்கான சக்தி – பிரதமர் மோடி பெருமிதம்

‘இந்தியாவின் இளைஞர்கள் இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதனால்தான் நான் உங்களை உலக நன்மைக்கான சக்தி என அழைக்கிறேன்,’ என்று பிரதமர் மோடி கூறினார்.

டில்லியில் உள்ள கரியப்பா மைதானத்தில் நடைபெற்ற தேசிய மாணவர் படை பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார். தொடர்ந்து நடந்த விழாவில் அவர் பேசியதாவது:

தற்போது இந்திய இளைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் உலகம் முழுவதும் எந்த வளர்ச்சியையும் கற்பனை செய்து பார்க்க முடியாது. கடந்த பல்லாண்டுகளாக நாட்டின் இளைஞர்கள் எதிர்கொள்ளும் தடைகளை அகற்றுவதற்கு மத்திய அரசு பணியாற்றி வருகிறது.

கடந்த ஆண்டுகளில் என்.சி.சி.,யின் வளர்ச்சிக்கு மத்திய அரசு பணியாற்றியுள்ளதில் நான் திருப்தி அடைகிறேன். ‘ஒரு தேர்தல், ஒரு நாடு’ என்பது இளைஞர்களின் எதிர்காலத்துடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், அது குறித்த விவாதத்தைத் தொடருமாறு என்.சி.சி.,, என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மற்றும் இளைஞர்களை வலியுறுத்துகிறேன்.

ஒவ்வொரு மாதமும் தேர்தல்கள் நடத்தப்பட்டால், கல்லூரிகள் மற்றும் நிறுவனங்களில் படிக்க மாணவர்களுக்கு எப்படி நேரம் கிடைக்கும்?

‘விக்சித் பாரத்’ என்ற நோக்கத்தில் கவனம் செலுத்துமாறு என்.சி.சி., மாணவர்களுடன் சேர்ந்து நாட்டின் இளைஞர்களையும் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இது இந்தியாவை புதிய உயரங்களுக்கு கொண்டு செல்லவும், சர்வதேச அளவில் ஒரு நாடாக வளரவும் உதவும்.

2014ம் ஆண்டில், தேசிய மாணவர் படையில் 14 லட்சம் பேர் இருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை சுமார் 20 லட்சத்தை எட்டியுள்ளது. அவர்களில் 8 லட்சத்திற்கும் அதிகமான பெண்கள் இருப்பது பெருமைக்குரியது.

இந்தியாவின் இளைஞர்கள் இல்லாமல் உலகின் எதிர்காலத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. அதனால்தான் நான் உங்களை உலக நன்மைக்கான சக்தி என்று அழைக்கிறேன்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...