சென்னை சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது – அண்ணாமலை

‘சென்னை ஈ.சி.ஆரில் பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் உள்ளது. தி.மு.க., கொடி கட்டிய காரில் பெண்களை துரத்திச் சென்ற வீடியோவை காணும்போது நெஞ்சம் பதறுகிறது’ என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

சென்னை சேத்துப்பட்டில் அண்ணாமலை அளித்த பேட்டி: மாநில அரசு சரியான தகவல் கொடுக்காமல் டங்ஸ்டன் சுரங்கம் வருவதற்கு காரணமாக இருந்தும் கூட மக்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ரத்து செய்தது. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் பல அரசியல் கட்சி தலைவர்கள் அரசியல் ஆக்கி கொண்டு இருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் தீர்மானம் போட்டதால் நடந்ததாக கூறுகிறார். இதற்கு முன் சட்டசபையில் போட்ட தீர்மானம் எல்லாம் நடந்து இருக்கிறதா?

பாதுகாப்பில்லை
டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்யப்பட்டதற்கு காரணம் பிரதமர் மோடி தான். நாளை அரிட்டாப்பட்டி சென்று விவசாயிகளை சந்திக்கிறோம்.

சென்னை ஈ.சி.ஆரில் பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. போலீஸ் ரோந்து பணியை அதிகரிக்க வேண்டும். பெண்களுக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. பெண்களை தி.மு.க., கொடி கட்டிய காரில் துரத்தி சென்ற வீடியோவை பார்க்கும் போது நெஞ்சு பதறுகிறது. போலீசாருக்கு எந்த வித உபகரணங்களும் கொடுக்காமல் தி.மு.க., அரசு இருக்கிறது.

அச்சுறுத்தல் கூடாது
பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க ஒரு ஆணி துரும்பை கூட கிள்ளி போடாமல் தி.மு.க., அரசு இருக்கிறது. செய்தியாளர்கள் தொலைபேசியை வாங்கி பார்ப்பதை முட்டாள் தனமான வாதமாக நான் பார்க்கிறேன்.

செய்தியாளர்களை அச்சுறுத்தக்கூடாது. செய்தியாளர்களிடம் ஆதாரம் கேட்பதில்லை. ஒரு செய்தியாளர்களை அழைத்து அச்சுறுத்தல் செய்தால், தமிழகத்தில் நடக்கும் எந்த விதமான விஷயங்களையும் வெளியே கொண்டு வர பயப்படுவார்கள்.

பகல் கனவு
செய்தியாளர்களின் மொபைல் போனை பறிமுதல் செய்து, சோதனை செய்வது ஊடகங்களுக்கு எதிராக தி.மு.க.,வின் மனப்பான்மையை காட்டுகிறது. முதல்வர் ஸ்டாலின் பகல் கனவில் இருக்கிறார்.

அரிட்டாப்பட்டியில் முதல்வர் ஸ்டாலினுக்கு நடந்த பாராட்டு விழாவிற்கு, மக்களுக்கு தலா. ரூ.300 கொடுத்து அழைத்து வந்துள்ளனர். தி.மு.க., ஆட்சி மீண்டும் வர வாய்ப்பு இல்லை.

நாளை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டிக்கு நடக்கும் பாராட்டு விழாவை பாருங்கள். மக்கள் தானாக வந்து ஆதரவு அளிப்பார்கள்.

நாடக கம்பெனி போல தான் தி.மு.க., ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. எந்த காரணத்திலும் அவர்கள் ஆட்சிக்கு திரும்ப வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்பது என்னுடைய கருத்து மட்டுமல்ல தமிழக மக்களின் பொதுவான கருத்து. கவர்னர் இருந்தால் தான் மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று சொன்ன தி.மு.க., தற்போது ஏன் கவர்னருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். நீங்கள் போடுவது டிராமா தான்.

இரட்டை வேடம் போடும் தி.மு.க.,வை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். தமிழகத்தில் கல்வித்திறன் சரிந்துள்ளது என்பதில் என்ன தவறு இருக்கிறது. தி.மு.க.,வினர் செய்யும் செயல் கோழைத்தனம்.முதல்வர் ஸ்டாலினுக்கு தைரியம் இருந்தால், மாவட்டம் மாவட்டமாக எவ்வளவு குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது என்பதை கணக்கு எடுத்து வெள்ளை அறிக்கை கொடுக்க வேண்டியது தானே?

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து உள்ளது உண்மை.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் தரவுகள் அடிப்படையில் பதில் அளிக்க வேண்டும். தமிழகத்தில் மாவட்ட தலைவர்களை தேர்வு செய்துவிட்டேன். தேசிய தலைவர் என்றைக்கு மாநில தலைவர் தேர்தல் நடத்த வேண்டும் என நினைக்கிறாரோ, அதற்கு தமிழக பா.ஜ., தயாராக இருக்கிறது. இதற்கு காரணம் மாவட்ட தலைவர்கள் நியமனத்தை 100 சதவீதம் முடித்துவிட்டோம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பா ...

பெரும்பாலான மாநகராட்சிகள் ‘பாஜக – சிவ சேனா’ கூட்டணி வசம் இந்தியாவின் பணக்கார மாநகராட்சியான மும்பை உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண் ...

வாழ வேண்டும் என்றால், பா.ஜ., வேண்டும் “மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜியின் காட்டாட்சிக்கு விரைவில் ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்ச ...

வடகிழக்கு இந்தியாவின் வளர்ச்சி திருவிழா பிரதமர் நரேந்திர மோடி இன்று குவஹாத்தியில் உள்ள லோகப்ரியா ...

S. I. R. உருப்படியான வேலையை முடித்த ...

S. I. R.  உருப்படியான வேலையை  முடித்திருக்கிறது தேர்தல் கமிஷன் S. I. R. மூலம் உருப்படியான ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபி ...

சாதூரியம், அரவணைப்பு நிதின் நபின் பா.ஜ.க-விற்கு புதிய தலைவர் நியமிக்கும்திட்டம் நீண்ட நாட்களாக கிடப்பில் ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும் ம ...

கேரளா தேர்தல் களம்: மாறிவரும்  முக்கோண அரசியல்! தற்போதைய முக்கோண அரசியல் போட்டி அதிக சுவாரசியத்தை ஏற்படுத்தி ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

நோய்களும் பரிகாரங்களும்

நோய்களுக்கு பிரதான காரணங்கள் இரண்டு. சரீரத்தில் ஏற்படும் மிதமிஞ்சிய வெப்பம் அல்லது மிதமிஞ்சிய ...