பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான், அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்ஸ் ஆகியோரை சந்தித்தார்.
3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி பாரிஸ் சென்றார். அங்கு விமான நிலையத்தில் திரண்ட இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். பிரதமரை பார்த்ததும் ‘ மோடி, மோடி’ எனவும், ‘ பாரத மாதாவுக்கு ஜே’ எனவும் கோஷம் எழுப்பினர்.
இது தொடர்பாக அவர் ‘எக்ஸ்’ சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: என்றும் நினைவில் வைக்கும் வகையில் பாரிஸ் நகரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்தியர்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்துவதை பனியால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவர்களின் அன்பை கண்டு பெருமிதம் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அளித்த விருந்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது மேக்ரானை சந்தித்து பேசிய அவர், பிறகு அமெரிக்க துணை அதிபர் ஜேடி வேன்சையும் சந்தித்தார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: பாரீசில் எனது நண்பர் இமானுவேல் மேக்ரானை சந்தித்ததில் மகிழ்ச்சி எனக் கூறியுள்ளார்.
இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ... |
உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |