இந்தியா மீது உலக நாடுகள் பார்வை – தாவர்சந்த் கெலாட் பெருமிதம்

”ஆன்மிகம் மற்றும் மன நலனுக்காக உலக நாடுகள் பார்வை இந்தியா மீது உள்ளது,” என்று, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பெருமிதமாக கூறினார்.

துமகூரு குனிகல் பிடனகெரே கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நவக்கிரக தம்பதியர் கோவில் மற்றும் பசவேஸ்வர மடத்தின் புதிய கோபுரத்தை, கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று திறந்து வைத்து பேசியதாவது:

மடத்தின் மடாதிபதிகள், முனிவர்கள், ஆச்சார்யர்கள் ஆகியோருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். இந்த விழாவில், உங்களுடன் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம். பிடனகெரே பசவேஸ்வரா மடம் மத தலம் மட்டும் இல்லை. பக்தர்களுக்கு ஆன்மிக அமைதி மற்றும் உத்வேகம் அளிக்கும் இடமாக உள்ளது. சமூக உத்வேகத்தின் மையமாக விளங்குகிறது.

பசவேஸ்வரரின் போதனைகள், சமூக சீர்திருத்தத்திற்கு நிறைய பங்களித்து உள்ளன. இங்கு வரும் மக்கள், பசவேஸ்வரரின் போதனைகளை கேட்பது மட்டும் அல்லாமல், வாழ்க்கையின் ஒழுக்கம், சமத்துவம், பக்தியை பின்பற்றவும் உத்வேகம் பெறுகின்றனர். உலக புகழ்பெற்ற 161 அடி உயர ஐந்து முகம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை இங்கு நிறுவப்பட்டு உள்ளது. சனீஸ்வரர், நவக்கிரகங்களை தரிசிக்க நிறைய பக்தர்கள் வருகின்றனர்.

பன்முக தன்மை கொண்ட மடம், சமூக முன்னேற்றத்திக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பு அளித்து உள்ளது. இங்கு ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குகிறீர்கள். சமூகத்தில் நிலவும் பல்வேறு பிரச்னைகளை தீர்க்க, நீங்கள் எடுத்து வரும் நேர்மறையான நடவடிக்கைகள் பாராட்டதக்கவை. ஆன்மிகம் மற்றும் மன நலனுக்காக உலக நாடுகள் பார்வை இந்தியா மீது உள்ளது. இதற்கு ‘பிரயாக்ராஜ் கும்பமேளா’ சிறந்த உதாரணமாக விளங்குகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

உணவை எளிதில் ஜீரணமாக்கும் பெருங்காயம்

நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ...

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...