உளுந்தின் மருத்துவக் குணம்

 இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ஈரல்நோய்கள், இடுப்புவலி முதலிய நோய்களைக் கண்டித்து தாதுவைப் பலப்படுத்தும். பெண்களுக்கு உண்டாகும் கருப்பை உறுப்புகளின் நோய்களைக் குணமாக்கும். ஆனால் கபத்தை உண்டுபண்ணும், பித்தத்தைக் குறைக்கும். மந்தத்தை உண்டு பண்ணும். வாயு அதிகரிக்கும்.

 

உளுந்தைப் பொன் வறுவலாக வறுத்து அரைத்து வெந்நீரில் கரைத்து காலை, மாலை உண்டுவர குன்மவியாதிகள் சாந்தமாகும். இதனால் செய்த உணவுப்பொருள்கள் பலவீன முள்ளவருக்கும், மெலிந்த தேகம், உள்ளவர்களுக்கும் மிகவும் சிறந்தது. உளுந்தில் கொடுக்கப்படுகிற எண்ணெய் வாதநோய்கள் முடக்குவாதம் முதலிய நோய் உள்ள இடத்தில் தேய்த்து வர இந்நோய்கள் குணமாகும்.

இதன் செடி வேரை அரைத்து சூடாக்கி வீக்கங்களுக்கு வைத்துக் கட்ட சுகம் தெரியும். சாதாரணமாக உளுந்தை சேர்த்து அரைத்து இட்லி செய்தும், தனியாக அரைத்து வடை செய்தும் அதிகம் சாப்பிடுவதனால் வாதம் அதிகரிக்கும். பித்தம் சிறிது அடங்கும். கஞ்சியாக செய்து அருந்துவதால் பசியைப் போக்கும். தீபனம் உண்டாக்கும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை வேர் | முருங்கை வேரின் மருத்துவ குணம்

முருங்கை வேரின் சாருடன் பாலை சேர்த்து அதை கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...