காங்கிரசிடம் மக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை – பிரதமர் மோடி

” மக்களின் விருப்பங்களை காங்கிரஸ் நசுக்கியது. இதனால், அக்கட்சியிடம் இருந்து எதிர்பார்ப்பதை மக்கள் நிறுத்திவிட்டனர்,” என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டில்லியில் ஆங்கில மீடியா நடத்திய கருத்தரங்கில் பிரதமர் மோடி பேசியதாவது: எட்ட முடியாத எந்த இலக்குகளும் கிடையாது. இந்தியா பெரிதாக சிந்திக்கிறது. பெரிய லட்சியங்களை அடைகிறது. சிந்தனையில் பெரிய அளவில் மாற்றம் செய்ததால், இது சாத்தியமாகியுள்ளது.

ஒரு லட்சம் இளைஞர்களை அரசியலுக்கு கொண்டு வர விரும்புகிறேன் என முன்பு கூறியிருந்தேன். குடும்பத்தில் இருந்து அரசியலுக்கு வரும் முதல் தலைமுறையினராக அவர்கள் இருக்க வேண்டும்.

2014க்கு முன் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகள் எப்படி இருந்தன என்பது இளைஞர்களுக்கு தெரியாது. ரூ.10 -12 லட்சம் கோடி அளவுக்கு மோசடிகள் நடந்தன. 2029ல் இளைஞர்கள் ஓட்டளிக்க செல்லும் போது, ஒப்பிடுவதற்கு என அவர்களுக்கு எதுவும் இருக்காது.

இது பாரதத்தின் யுகம் என ஒட்டு மொத்த நாடும் சொல்கிறது. உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக வரும் நிலையில் பாரதம் இருக்கிறது.

இந்தியாவின் சாதனையும், வெற்றியும் உலக நாடுகளுக்கு புதிய நம்பிக்கையையும் எதிர்பா்ப்பையும் அளித்து உள்ளது. முன்பு உலக நாடுகளுக்கு சுமையாக இருந்த இந்தியா, இன்று உலகத்தின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கிறது.

நாட்டின் வேகம் மற்றும் சாதனைகளில் இருந்து இந்தியாவின் எதிர்கால திசையை புரிந்து கொள்ள முடியும். நாடு சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் ஆன போதும், உலகின் 11வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் 5வது பெரிய பொருளாதார நாடாக மாறி உள்ளோம். அதே வேகத்தில் 3வது இடத்தை நோக்கி முன்னேறுகிறோம்.

18 ஆண்டுகளுக்கு முன்பு 2007ல் பாரத்தின் ஓராண்டு ஜிடிபி 1 லட்சம் கோடியை தாண்டியது. ஆனால், இந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் இதனை தாண்டிவிட்டோம்.

மக்களுக்கு அனுப்பப்படும் ஒவ்வொரு ஒரு ரூபாயிலும் 15 பைசா மட்டுமே ஏழை மக்களுக்கு செல்கிறது என முன்னாள் பிரதமர் கூறினார். மக்களின் விருப்பங்களை காங்கிரஸ் நசுக்கியது. அக்கட்சியிடம் இருந்து மக்கள் எதையும் எதிர்பார்க்கவில்லை.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, குழந்தைகளுக்கான பொம்மைகள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், இன்று பொம்மைகள் ஏற்றுமதி மும்மடங்கு அதிகரித்து உள்ளது.கடந்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்பில் மூலதன செலவு ஐந்து மடங்கு அதிகரித்து உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

விளையாட்டு வீரர்களுக்கான உணவு முறைகள்

விளையாட்டு வீர்கள் ஒரு குறிப்பிட்ட உணவுகளை விரும்பி உண்டால் உணவில் மேற்கூறியபடி பல்வேறு ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...