ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல்இயக்கம் பிரிவினை வாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது. இதனை வரவேற்பதாக உள்துறை அமைச்சர் அமித்-ஷா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமித் ஷா எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஹரியத்தின் இரண்டு அமைப்புகளான ஜம்மு-காஷ்மீர் இயக்கம், ஜனநாயக அரசியல் இயக்கம் பிரிவினைவாதத்துடனான அனைத்து உறவுகளையும் துண்டிப்பதாக அறிவித்துள்ளது. பாரதஒற்றுமையை வலுப்படுத்துவதற்கான இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதைபோன்று அனைத்து அமைப்புகளும் முன்வந்து பிரிவினைவாதத்தை முற்றிலுமாக கைவிடவேண்டும் என கேட்டுக்கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், வளர்ந்த, அமைதியான மற்றும் ஒன்றுபட்டபாரதத்தை கட்டியெழுப்ப வேண்டும் என்ற பிரதமர் நரேந்திரமோடியின் தொலைநோக்குப் பார்வைக்கு இது ஒருபெரிய வெற்றியாகும் என்றும் குறித்த பதிவில் அமித்-ஷா தெரிவித்துள்ளார்.
வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ... |
குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |