எலான் மஸ்குடன் பிரதமர் மோடி ஆலோசனை

அமெரிக்க தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் உடன் தொலைபேசியில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசினார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், உலகப் பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், ‘டெஸ்லா, எக்ஸ், ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியாக உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அரசில், அரசு செலவினங்கள் துறையின் தலைமை பொறுப்பிலும் அவர் உள்ளார்.

இந்நிலையில், எலான் மஸ்க் உடன் தொலைபேசியில் பிரதமர் மோடி நேற்று பேசினார்.

அப்போது, இந்தியா – அமெரிக்கா இடையே தொழில்நுட்பம், புத்தாக்க கண்டுபிடிப்புகளில் ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் விவாதித்தனர்.

இது குறித்து, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவு:

எலான் மஸ்க் உடன் பேசினேன். இந்தாண்டு துவக்கத்தில், வாஷிங்டனில் சந்தித்த போது பேசிய பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரிடம் கலந்துரையாடினேன்.

தொழில்நுட்பம், புத்தாக்க கண்டுபிடிப்பு ஆகிய துறைகளில், ஒத்துழைப்புக்கான மகத்தான வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம்.

இந்த துறைகளில் அமெரிக்காவுடனான ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா உறுதிபூண்டுள்ளது.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

எலான் மஸ்கின் டெஸ்லா மின்சார கார் நிறுவனம், நம் நாட்டில் கால் பதிக்க உள்ளதாகக் கூறப்படும் நிலையில், இந்த உரையாடல் நடந்துள்ளது.

கடந்த பிப்ரவரியில் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, எலான் மஸ்கை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர் ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

இஞ்சியின் மருத்துவ குணங்கள்

வயிற்றுஉப்பிசம், வயிற்றுவலி ஏற்பட்டிருந்தால் 1௦ கிராம் இஞ்சியை நைத்து ஒரு சட்டியில் போட்டு, ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...