திமுக ஆட்சிக்கு பூட்டு போட வேண்டும் – பாஜக மாநில தலைவர்

”அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி; இறுதியான கூட்டணி” என தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.

திண்டுக்கல்லில் கட்சி கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் பேசியதாவது: அ.தி.மு.க., -பா.ஜ., கூட்டணி உறுதியான கூட்டணி; இறுதியான கூட்டணி. 2026ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். அது இ.பி.எஸ்., தலைமையில் அமையும். அமித்ஷா வந்ததால் தான் குஜராத்தில் ஆட்சி வந்தது. மஹாராஷ்டிராவில் ஆட்சி மலர்ந்தது.

ஆட்சி மாற்றம் குறித்து நாம் பேச வேண்டியது இல்லை; அமித்ஷா, இ.பி.எஸ்., பார்த்து கொள்வார்கள். திருநெல்வேலி என்றால் அல்வா, மணப்பாறை என்றால் முறுக்கு.

திண்டுக்கல் என்றால் பூட்டு; இந்த ஆட்சிக்கு போட வேண்டும் பூட்டு. மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே கவர்னர் ஒரு தபால்காரர் என முதல்வர் கூறுகிறார். கவர்னர் என்பவர் மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம்.

அப்படி இருக்கையில் கவர்னரை தபால்காரர் எனக் கூறுவது தமிழக முதல்வருக்கு அழகல்ல. சட்டசபை தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் அதற்கான பணிகளை செய்வதற்கான நேரம் குறைவாக உள்ளது. அதனால் நான் எந்த யாத்திரையும் மேற்கொள்ள திட்டம் தீட்டவில்லை. இவ்வாறு நயினார் நாகேந்திரன் பேசினார்.

மக்கள் நலத்திட்டங்களை வழங்குவதுபோல் வழங்கிவிட்டு மக்களை யாசகர்கள் போல இழிவாக பேசுவது தி.மு.க.,விற்கு புதிதல்ல 

எளிய மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், ஏற்றத் தாழ்வற்ற சமூகத்தை உருவாக்கவும் இலவசங்கள், உரிமைத்தொகை போன்ற திட்டங்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால்,

அறிவாலயம் மட்டும் எப்போதுமே மக்களைக் கொச்சைப்படுத்தும் விதமாக அதை சுட்டிக்காட்டி அரசியலை செய்கிறார்கள்.

அதே சமயம், கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளின் படி எந்த திட்டங்களையும் செயல்படுத்தாத கட்சியாகவும் திமுக உள்ளது. இந்த நான்கு ஆண்டு காலம் மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் திமுகவிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருகிறார்கள்.

காரணம், எப்போது பார்த்தாலும் பெண்களின் தன்மானத்தை சீண்டும் விதம் திமுக தலைவர்கள் மேடையில் பேசி வருகிறார்கள்.

அம்மாவுக்கும், மகளுக்கும் ரூ.1000 என்று அமைச்சர் துரைமுருகன் பேசினார். பின் அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர் ஆனந்த் , முகமெல்லாம் பளிச்சென்று உள்ளது, ரூ.1000 வந்ததா? என்று பொதுக்கூட்டத்தில் கேலி செய்தார். “ஓசி பஸ்” என்று பெண்களைக் கொச்சைப்படுத்தினார் அமைச்சர் பொன்முடி

. இதே வரிசையில் தான் திமுக பேச்சாளர் தமிழன் பிரசன்னா தற்போது பேசியுள்ளார்.

ஒரு வயது முதிர்ந்த பெண்மணி விலைவாசி ஏற்றத்தை சுட்டிக்காட்டும் போது, ஆளுங்கட்சியாக பொறுப்புணர்ந்து பேசாமல், மேடையிலிருந்தே ரூ.1000 பணத்தை நிறுத்தி விடுவேன் என மிரட்டியும், இலவசமாக அரிசி வாங்குகிறீர்கள் அல்லவா என நக்கல் செய்தும் பேசியுள்ளார் திமுக பிரமுகர் தமிழன் பிரசன்னா

இந்த ஆணவப் போக்குதான் அவர்களை 1977-லிலும் 2011லும் தோற்கடித்தது. ஒருமுறை 12 வருடம், இன்னொரு முறை 10 வருடமென படுதோல்வியின் படுகுழியிலேயே 22 ஆண்டுகள் விழுந்து கிடக்க வைத்தது. இப்படி, இரண்டாவது முறை ஆட்சிக்கு வரமுடியாமல் அவர்கள் வீழ்வதே அதிகாரத்தைத் தவறாக பயன்படுத்தும் நோக்கத்தோடு செயல்பட்டதால்தான்!

இதோ அந்தப் படுகுழி மீண்டும் வாராய் என அவர்களை அழைக்கிறது!

அதற்கு முன், இவ்வாறான ஏளனப் பேச்சுக்களைப் பேசும் தனது கட்சிக்காரர்களின் மீது முதல்வர் ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை மக்கள் பார்த்தபடி தான் இருக்கிறார்கள்!

இவ்வாறு நயினார் நாகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்த� ...

பயங்கரவாதத்திற்கு எதிராக இந்தியாவும் பராகுவேயும் ஒற்றுமையாக நிற்கின்றன – பிரதமர் மோடி 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரி� ...

தமிழில் பிழையின்றி எழுதத் தெரியாத அமைச்சர் செங்கல்பட்டு மாவட்டம் மூவரசம்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி நிகழ்ச்சியில், அமைச்சர் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் ...

200 தொகுதியில் வெற்றி என்றவர்கள் தொண்டர்களிடம் கெஞ்சுவது ஏன்? '200 தொகுதிகளில் வெற்றி என்றவர்கள், தற்போது தொண்டர்களை களப்பணியாற்றுமாறு ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிற� ...

ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற மனமில்லாத ஸ்டாலின்: நயினார் நாகேந்திரன் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஆட்சியின் இறுதி காலத்தில் கூட ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிர� ...

தேசியக்கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் அவமரியாதை; அண்ணாமலை கண்டனம் தேசியக் கொடி தலைகீழாக ஏற்றியிருப்பது கூடத் தெரியாமல் அமைச்சர் ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழ� ...

வெளிநாடு சென்ற எம்.பி.க்கள் குழுவை சந்திக்கும் பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் பற்றி விளக்கங்களை கூற ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

கருத்தரித்த முதல் 3 மாதங்களில் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது ?

கருத்தரிப்பு என்பது வியாதியில்லை. அது ஒரு உடல் ரீதியான மாற்றம். இதைச் ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...