பாகிஸ்தானியர்களின் விசா ரத்து – மத்திய அரசு அதிரடி

காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவையை நிறுத்தி வைத்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் வரும் 27 ம் தேதி முதல் ரத்து செய்யவதாகவும் அறிவித்து உள்ளது. அதேபோல், பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிட்டு உள்ளது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாக இந்தியா அறிவித்து உள்ளது. ‘ சார்க் ‘கூட்டமைப்பு நாடுகளுக்கான ‘விசா விதி விலக்கு’ பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்படுகிறது. அந்த விசாவில் வந்து இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியே வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வாகா – அட்டாரி எல்லை உடனடியாக மூடவும், பாகிஸ்தானை சேர்ந்த யாருக்கும் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி கிடையாது. வாகா – அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்து இருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி மே 1ம் தேதிக்குள் திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவை பின்பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது

*பாகிஸ்தானியர்களுக்காக வழங்கப்பட்டு வந்த விசா சேவை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

*ஏற்கனவே வழங்கப்பட்டு பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய விசா அனைத்தும் வரும் 27 ம் தேதி முதல் ரத்து செய்யப்படும்.

*மருத்துவ காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசா அனைத்தும் ஏப்., 29 வரை மட்டுமே செல்லுபடியாகும்

*இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும், விசா காலாவதியாகும் முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

*பாகிஸ்தான் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

*பாகிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் ஏராளமானோர், தங்கள் நாட்டிற்கு திரும்ப வாகா – அட்டாரி எல்லையில் குவிந்துள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தொழில் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தமிழகம் வந்துள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணியை போலீசார் துவக்கி உள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜ ...

மனதை நொறுங்கச் செய்த நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் இரங்கல் ஆமதாபாத் விமான விபத்துக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்ற ...

50 வாக்குறுதியைக் கூட நிறைவேற்றாத தி.மு.க.,: அண்ணாமலை குற்றச்சாட்டு தி.மு.க., அளித்த 500க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளில் 50ஐ ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனிய ...

மகளிரை அவமதிக்கும் தி.மு.க., இனியாவது திருந்தட்டும்; நயினார் நாகேந்திரன் காட்டம் ''மகளிரை அவமதிக்கும் தி.மு.க., அரசு இனியாவது திருந்தட்டும்'' என ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகள ...

அ.தி.மு.க-வுக்கு இணையான தொகுதிகளில் பா.ஜ.க போட்டியிட வேண்டும்: மோடிக்கு அண்ணாமலை கடிதம் 2026 தேர்தலில் அதிமுக போட்டியிடும் தொகுதி எண்ணிக்கையில் சரிபாதியில் ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்ப ...

அகமதாபாத் விமான விபத்து – மீட்பு நடவடிக்கையை விரைவுப்படுத்த பிரதமர் மோடி உத்தரவு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட அகமதாபாத்திற்கு விரைந்து ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

மருத்துவ செய்திகள்

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...