பாகிஸ்தானியர்களின் விசா ரத்து – மத்திய அரசு அதிரடி

காஷ்மீர் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவையை நிறுத்தி வைத்துள்ள மத்திய வெளியுறவு அமைச்சகம், ஏற்கனவே வழங்கப்பட்ட அனைத்து விசாக்களும் வரும் 27 ம் தேதி முதல் ரத்து செய்யவதாகவும் அறிவித்து உள்ளது. அதேபோல், பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக தாயகம் திரும்ப உத்தரவிட்டு உள்ளது.

பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் உடனான உறவுகளை துண்டித்துக் கொள்வதாக இந்தியா அறிவித்து உள்ளது. ‘ சார்க் ‘கூட்டமைப்பு நாடுகளுக்கான ‘விசா விதி விலக்கு’ பாகிஸ்தானுக்கு ரத்து செய்யப்படுகிறது. அந்த விசாவில் வந்து இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியே வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வாகா – அட்டாரி எல்லை உடனடியாக மூடவும், பாகிஸ்தானை சேர்ந்த யாருக்கும் இந்தியாவிற்குள் பயணம் செய்ய அனுமதி கிடையாது. வாகா – அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் யாராவது வந்து இருந்தால், தகுந்த ஆவணங்களை காட்டி மே 1ம் தேதிக்குள் திரும்பவும் மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்நிலையில், இந்த உத்தரவை பின்பற்றி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் பல அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளது

*பாகிஸ்தானியர்களுக்காக வழங்கப்பட்டு வந்த விசா சேவை உடனடியாக நிறுத்தி வைக்கப்படுகிறது.

*ஏற்கனவே வழங்கப்பட்டு பாகிஸ்தானியர்களுக்கு இந்தியா வழங்கிய விசா அனைத்தும் வரும் 27 ம் தேதி முதல் ரத்து செய்யப்படும்.

*மருத்துவ காரணங்களுக்காக வழங்கப்பட்ட விசா அனைத்தும் ஏப்., 29 வரை மட்டுமே செல்லுபடியாகும்

*இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும், விசா காலாவதியாகும் முன்னர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்.

*பாகிஸ்தான் செல்வதை இந்தியர்கள் தவிர்க்க வேண்டும்.

*பாகிஸ்தானில் வசிக்கும் இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்ப வேண்டும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்கள் ஏராளமானோர், தங்கள் நாட்டிற்கு திரும்ப வாகா – அட்டாரி எல்லையில் குவிந்துள்ளனர்.

அதேபோல், தமிழகத்தில் தங்கி உள்ள பாகிஸ்தானியர்களை நாளைக்குள் வெளியேற்ற போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தொழில் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தமிழகம் வந்துள்ள பாகிஸ்தானியர்களை கணக்கெடுக்கும் பணியை போலீசார் துவக்கி உள்ளனர்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியா மட்டும் தான் போரில் இரு ...

இந்தியா மட்டும் தான் போரில் இருந்து ஒதுங்கி வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கையில் ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்த ...

இயக்கவியல் தாக்குதலுக்கு இந்தியாவைக் குறை கூறுவது தவறான தகவல் தந்திரமாகும். ஈரானிய போர்க்கப்பலான IRIS Dena-வை அமெரிக்கா மூழ்கடிக்க "அனுமதித்ததற்காக" ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த ...

ஆசியப் பெருநிலத்தின் சக்கவர்த்தியாக இந்தியா ஆகும். 2023 க்கு முன்பு வெறும் 2 அல்லது 3% ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மா ...

வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கு – பிரதமர் மோடி உரை வேளாண்மை மற்றும் கிராமப்புற மாற்றம் குறித்த பட்ஜெட்டுக்குப் பிந்தைய ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப் ...

தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் திறந்து வைக்கும் மோடி தில்லியில் 33,500 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்ச ...

சர்வதேச மகளிர் தினம் 2026 வளர்ச்சியடைந்த பாரதத்தின் அடித்தளமாக விளங்கும் மகளிர் சக்தி * சர்வதேச மகளிர் தினம் மார்ச் 8 அன்று ...

மருத்துவ செய்திகள்

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

வெற்றிலையின் மருத்துவக் குணம்

செரிமானமூட்டியாகவும், கப அகற்றியாகவும் செயல்படுகிறது.