ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது: தொலைநோக்கு திட்டம் தீட்டுகிறது மத்திய அரசு

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் சிஆர் பாட்டீல் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்து உள்ளது. இந்த ஒப்பந்தம் போட்ட பிறகு முதல் முறையாக ரத்து செய்யப்படுகிறது.

ஒப்பந்தம் ரத்து தொடர்பாக முறையான அறிவிப்பை பாகிஸ்தானிடம் தெரிவித்து உள்ளது. மத்திய ஜல்சக்தித் துறை செயலர் தேவ்ஸ்ரீ முகர்ஜி இது தொடர்பான கடிதத்தை பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசாவிற்கு அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஜல்சக்தித்துறை அமைச்சர் சிஆர் பாட்டீல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு சிஆர் பாட்டீல் கூறியதாவது: மத்திய அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின் போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் 3 வகையான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் குறுகிய கால, நடுத்தரம் மற்றும் நீண்ட கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நதி தூர் தூரவாரப்பட்டு நீர் திருப்பி விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

ஆவாரையின் மருத்துவ குணங்கள்

ஆவாரயிலையைத் தேவையான அளவு பறித்து, அம்மியில் வைத்து அரைத்து, அது இருக்கும் அளவிற்குக் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...