ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லக்கூடாது: தொலைநோக்கு திட்டம் தீட்டுகிறது மத்திய அரசு

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் குறுகிய கால, நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது என மத்திய அமைச்சர் சிஆர் பாட்டீல் கூறியுள்ளார்.

காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்து உள்ளது. இந்த ஒப்பந்தம் போட்ட பிறகு முதல் முறையாக ரத்து செய்யப்படுகிறது.

ஒப்பந்தம் ரத்து தொடர்பாக முறையான அறிவிப்பை பாகிஸ்தானிடம் தெரிவித்து உள்ளது. மத்திய ஜல்சக்தித் துறை செயலர் தேவ்ஸ்ரீ முகர்ஜி இது தொடர்பான கடிதத்தை பாகிஸ்தான் நீர்வளத்துறை செயலாளர் சையத் அலி முர்தாசாவிற்கு அனுப்பி உள்ளார்.

இந்நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டில்லியில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ஜல்சக்தித்துறை அமைச்சர் சிஆர் பாட்டீல் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்திற்கு பிறகு சிஆர் பாட்டீல் கூறியதாவது: மத்திய அமைச்சர் அமித் ஷா உடனான சந்திப்பின் போது, சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து தொடர்பான திட்டம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டத்தில் 3 வகையான திட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்லாத வகையில் குறுகிய கால, நடுத்தரம் மற்றும் நீண்ட கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் நதி தூர் தூரவாரப்பட்டு நீர் திருப்பி விடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நித ...

பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது- அர்ஜுன் ராம் மேக்வால் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையு ...

நாடாளுமன்றத்தின் கண்ணியத்தையும் புனிதத்தையும் பாதுகாப்பதில் பாஜக அக்கறை- கிரண் ரிஜிஜூ மக்களவையில் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்ட வீடியோவை ஒன்றிய ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடை ...

ரயில்வே திட்டங்களின் பின்னைடைவுக்கு காரணம் தமிழக அரசுதான் – அஸ்வின் வைஷ்ணவ் தமிழகத்​தில் நிலம் கையகப்​படுத்​து​வ​தில் நில​வும் தாமதத்​தால் தான் பல ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் க ...

எ ஐ க்கு மாணவா்கள் அடிமையாகக் கூடாது: பிரதமா் மோடி அறிவுரை கைப்பேசி, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்கள் ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி ...

செஷல்ஸ் வளர்ச்சிக்கு ரூ.1,575 கோடி அறிவித்தார் பிரதமர் மோடி 'செஷல்ஸ் வளர்ச்சிக்காக 1,575 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்' ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத் ...

2024-25-ம் நிதியாண்டில் மீன் உற்பத்தி 197 லட்சம் டன்னாக அதிகரிப்பு இந்தியா உலகின் இரண்டாவது மிகப் பெரிய மீன் உற்பத்தியாளராகவும், ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

நீரிழிவு நோய் குறைந்த அளவு கலோரி தரும் உணவை சாப்பிட்டுவந்தால் குணமாகிவிடும்

உலகம் எங்கும் நீரிழிவு நோய் மக்களை பெரிய அளவில் வாட்டி வதக்கி வருகிறது ...

நன்னாரியின் மருத்துவ குணம்

நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு ...