திட்டமிட்டு உழைத்தால் ஆட்சி நமதே

 திட்டமிட்டு உழைத்தால் ஆட்சி நமதே ஊழலை சகித்துக்கொள்ளாத நிலைப்பாட்டினை பாஜக எடுக்கவேண்டும், திட்டமிட்டு உழைத்தால் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றான அரசியல்சக்தியாக பா.ஜ.க.,வால் மீண்டும் உருப்பெறமுடியும் என புதுதில்லியில் ஞாயிற்றுக் கிழமை நடந்த தேசிய கவுன்சில் கூட்டத்தில் பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசியுள்ளார்.
தேசிய கவுன்சில் கூட்டத்தில் இது தொடர்பாக அவர் மேலும் பேசியதாவது:

1980-ஆம் ஆண்டில் பாஜக தொடங்கப்பட்டபோது பேசிய வாஜ்பாய் “பாஜக வித்தியாசமான கட்சியாகத் திகழவேண்டும்’ என்றார். அதை தொடர்ந்து மிகுந்த கட்டுக் கோப்புடனும் விழிப்புடனும் செயல்படும் கட்சியாக பா.ஜ.க திகழ்ந்தது. ஆனால், சில வருடங்களாக வித்தியாசம் நிறைந்த கட்சியாக பா.ஜ.க விளங்கிவருகிறது. அரசியல் கட்சியில் கருத்துவேறுபாடுகள் எழுவது சகஜம்தான் . கட்சி வளர்ச்சிக்கான மாறுபட்ட கருத்துக்களை வரவேற்க வேண்டும்.

வாரிசு அரசியல் பாஜகவில் கிடையாது; உள் கட்சி ஜனநாயம் ஊக்குவிக்கப் படுகிறது. ஆனால், இந்த அடையாளங் களுக்கு பாதகமாக உள்கட்சிபூசல்கள் உள்ளன. இனிவரும் காலங்களில் இந்த பிரச்னை எழாமல் தடுக்க கட்சியின் மத்திய-மாநில தலைமைகளுடன் ராஜ்நாத்சிங் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

தங்களுக்கு மாற்றாக மத்தியில் வேறு அரசு அமையாது என்ற மேதப்பில் காங்கிரஸ் இருக்கிறது . ஆனால், ஊழல்நிறைந்த காங்கிரஸ் கூட்டணிஅரசு மீது மக்களின் என்ன ஓட்டமோ வேறு மாதுரி உள்ளது . அதனால், எந்த சூழலிலும் ஊழலை சகித்துக்கொள்ளாத கட்சியாக பா.ஜ.க திகழவேண்டும்.

சிறுபான்மையினர் நலன்களுக்காக பா.ஜ.க தந்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற ஈடுபாடு காட்டவேண்டும். திட்டமிட்டு உழைத்தால் மத்தியில் காங்கிரசுக்கு மாற்றான அரசியல்சக்தியாக பா.ஜ.க.,வால் மீண்டும் உருப்பெறமுடியும் என அத்வானி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...