கர்நாடகவில் சமிபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.,கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற முடியாததை தொடர்ந்து அம்மாநில பா.ஜ.க தலைவராகவும் இருந்த கேஎஸ்.ஈஸ்வரப்பா, தனது கட்சி தலைவர்பதவியை ராஜினாமா செய்தார்.
இதைத்தொடர்ந்து, பாஜக.,வின் பாராளுமன்ற உறுப்பினர் பிரகலாத்ஜோஷியை கர்நாடக மாநில பாஜக தலைவராக நியமிப்பதாக இன்று புது டெல்லியில் அகிய இந்திய பாஜக தலைவர் ராஜ்நாத்சிங் அறிவித்துள்ளார் .
பிரகலாத் ஜோஷி நியமனத்துக்கு கர்நாடக ஜனதா கட்சி தலைவர் பிஎஸ்.எடியூரப்பா வரவேற்றுள்ளார்.கட்சி மட்டத்திலும் அரசு மட்டத்திலும் அடிக்கடி தொடர்புகொள்ளும் நிலையில் இருக்கும் ஜோஷியின் தேர்வு வரவேற்க்க தக்கது என்று அம்மாநில முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கருத்து தெரிவித்துள்ளார்.
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.