பாகிஸ்தானுக்கு பெருந்தன்மைக்கான தகுதி இல்லை

பாகிஸ்தானுக்கு  பெருந்தன்மைக்கான தகுதி இல்லை பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் அப்சல் குரு மரண தண்டனையை எதிர்த்து தீர்மானம் இயற்றப்பட்டிருப்பது இந்தியாவின் தேசியக் கண்ணோட்டத்தின் அடிப்படையில் கவலைக்குரியதாகும் மரண தண்டனைக்கு உள்ளான நபர் இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர். இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில்

தலையிடுவதோடு மட்டுமின்றி, பாகிஸ்தானின் கூட்டு அவையில் அதிகாரப்பூர்வமான அறிக்கை ஒன்றே வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை பாகிஸ்தானின் அரசு, ராணுவம், அவர்களது உளவுத்துறையான ஐஎஸ்ஐ, குடிமக்கள் பரிபாலனம் ஆகியவை யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்பது நமது வியப்பாக இருந்துவந்தது ஆனால் சமீபத்திய தீர்மானத்தின் மூலம், இந்த வேறுபாடுகள் அனைத்தும் குலைந்துவிட்டன. இந்தியாவில் நடந்த மோசமான தாக்குதல்களில் ஒன்றுக்கு பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ அங்கீகார முத்திரை அளித்துவிட்டது.

இதுவரை இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் எல்லைக்கு அப்பால் திட்டமிடப்பட்டதற்கு சாட்சியங்கள் இருக்கின்றன என்று நாங்கள் குற்றம்சாட்டி வந்தோம். ஆனால் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் சமீபத்திய தீர்மானத்தின் மூலம், அது உறுதிப்பட்டுள்ளது. நமது நாட்டில் நிலவும் சட்டத்தின் ஆட்சி மூலம், தண்டனை கொடுக்கப்பட்ட நபருக்கு பாகிஸ்தான் ஆதரவு கொடுத்து தீர்மானம் இயற்றியுள்ளது. நமது படைவீரர்களின் தலைகளை வெட்டியதும், ஐதராபாத்தில் குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது, சிஆர்பிஎப் வீரர்களைத் தாக்கியது போன்ற சம்பவங்களின் நிறைவுரையாகத்தான் பாகிஸ்தானின் தீர்மானம் இருக்கிறது.

தீவிரவாதிகளின் விஷயத்தில் பாகிஸ்தானின் உளப்போக்கு என்ன என்பது நன்றாக தெளிவாகிவிட்டது. இச்சூழ்நிலையில் பாகிஸ்தானை எப்படி நடத்துவது என்பதை மத்திய அரசுதான் திட்டமிட வேண்டும். மரியாதைக்குரிய பிரதம மந்திரி, பாகிஸ்தானுடன் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கத் தயாராக இருப்பதாக முன்பு கூறியுள்ளார்.
பாகிஸ்தான் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும்
ஆனால் இந்தியாவை பாகிஸ்தான் தொடர்ந்து கோபமூட்டிவருகிறது. இந்நிலையில் பிரதமர் அந்தப் பெருந்தன்மையை மறக்கவே வேண்டும். பாகிஸ்தானுக்கு அந்தப் பெருந்தன்மைக்கான தகுதி இல்லை. பாகிஸ்தானின் தீர்மானத்தைப் பொருத்தவரை, இந்தியாவில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு அவர்கள் ஆதரவு தெரிவிக்கும் வரை முறையான பேச்சுவார்த்தைகளால் எந்தப் பயனும் இல்லை என்றே நினைக்கிறேன். இந்தியாவின் கூடுதல் பெருந்தன்மையை எதிர்பார்ப்பதை விட பாகிஸ்தான் கூடுதல் பெருந்தன்மையுடன் நடக்கவேண்டும். இருநாடுகளுக்கு இடையிலான உறவுகள் உண்மையிலேயே சீர்ப்பட வேண்டும் என்று விரும்பினால் இதுபோன்ற தீர்மானங்களின் மூலம் அது சாத்தியப்படாது. மாலே, ரோம் அல்லது இஸ்லாமாபாத் என்று எந்த நாடாக இருந்தாலும் சரி, நாம் இப்போது இருக்கும் தீவிரமான நிலையை சந்தித்துவரும் சூழலில் எதையும் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாத நிலையில் இருக்கிறோம்.

நமது வெளியுறவுக் கொள்கையை நாம் தீவிரமாக பரிசீலிக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். அத்துடன் அக்கொள்கைகள் நம்மை எந்த இடத்திற்கு கொண்டு செல்கிறது  என்பதையும் நாம் கருதவேண்டும். சர்வதேச ரீதியில் தொடர்ந்து இதேபோல இந்தியா பல்வேறு நாடுகளால் ஏமாற்றப்பட்டால், நமது வெளியுறவு கொள்கையில் ஏதோ தவறு இருக்கிறது என்பதே அர்த்தம். அதனால் மாண்புமிகு பிரதமரும், வெளியுறவுத் துறை அமைச்சரும் ஒரு தேதியை நிர்ணயித்து இந்த விவகாரம் தொடர்பாக விரிவாக விவாதிக்க வேண்டும் .

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...