பா.ஜ.க., பயங்கரவாதத்தையும் , ஊழலையும் பொருத்துக்கொள்ளது

 பா.ஜ.க.,  பயங்கரவாதத்தையும் , ஊழலையும் பொருத்துக்கொள்ளது பா.ஜ., இந்துமுன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ்., இயக்க தலைவர்கள் தொடர்ந்து படுகொலை செய்ய படுவதைத் தடுக்க மத்தியஅரசு நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சேலத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜ.க , மூத்த தலைவர் அத்வானி கேள்வி எழுப்பியுள்ளார்.

பா.ஜ.க, மாநில பொதுச் செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து ஜவஹர்மில் திடலில் நடந்த கூட்டத்தில் பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி பேசினார். அவர் பேசுகையில், கடந்த 1997ம் ஆண்டு கடைசியாக சேலம்வந்ததாக ஞாபகம். இன்றைய தினம் ஒருமோசமான சம்பவத்திற்காக சேலம் வந்துள்ளேன். சிறந்த ஆடிட்டரான ரமேஷ் ஏன் கொலைசெய்யப்பட்டார் என்றே தெரியவில்லை. இங்கு வருவதற்கு முன் அவரது வீட்டிற்குச்சென்று ஆறுதல் கூறினேன். ஆடிட்டர் ரமேஷ்கொலை தொடர்பாக, சிறப்பு விசாரணை குழுவை அமைத்துள்ள முதல்வர் ஜெயலலிதாவிற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கொலையாளிகள் கைதுசெய்யப்பட்டு தண்டிக்கப்பட்டால் தான், விசாரணைக் குழு அமைக்கப்பட்டதற்கான நோக்கம் முழுமை அடையும் . ஆடிட்டர் ரமேஷூக்கு அஞ்சலிசெலுத்தும் விதமாக பொதுமக்கள் திரளாகநிற்பது மனதை நெகிழச்செய்கிறது.

கடந்த 1951 ம் ஆண்டு முதல் சிலநாட்களை மறக்க முடியாது. ஜூலை 19ம் தேதி ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டார். 1998ம் ஆண்டு தேசியஜனநாயக கூட்டணி, நிலையான ஒரு ஆட்சி வாஜ்பாய் தலைமையில் அமைந்தது. அதற்கு சிலநாட்களுக்கு முன்பாக கோவையில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ள வந்தேன்.

அப்போது குண்டுவெடிப்பால் பலர் கொல்லப்பட்டுள்ளனர். காயப்பட்டுள்ளனர். அதுபோன்ற ஒரு மோசமான சம்பவத்தை மறக்கமுடியாது. சாம்பிரகாஷ் முகர்ஜி காஷ்மீரில் கொல்லப்பட்டார். தீனதயாள் உபாத்யா ஓடும்ரயிலில் கொல்லப்பட்டார். இதுபோல் நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சிலமாதங்களாக தமிழகத்தில் பா.ஜ.க, இந்து முன்னணி மற்றும் ஆர்எஸ்எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள் கொல்லப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

ஆடிட்டர் ரமேஷ் சேலத்தில் கொல்லப்பட்டுள்ளார். இதை பொறுத்துக் கொள்ள முடியாமல் பா.ஜ., மகளிரணியைச்சேர்ந்த ராஜ ராஜேஸ்வரி தீக்குளித்து இறந்துள்ளார். இதேபோல், முருகமணி என்பவர் மாரடைப்பால் பலியாகி யுள்ளார். இதற்கெல்லாம் காரணமாக பயங்கரவாதிகள் தண்டிக்கப்பட வேண்டும். விரைவிலேயே தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்குமுன் நடந்த காமன்வெல்த் போட்டிகளில் இருந்தே மக்கள் ஆட்சிமாற்றத்தை எதிர்பார்க்கத் துவங்கிவிட்டனர். அவர்கள் நரேந்திரமோடி, ராமன் சிங், சிவராஜ்சிங் சவுகான் போன்ற ஆட்சிகளையும் பார்க்கின்றனர். மத்திய ஆட்சியையும் பார்க்கின்றனர். பா.ஜ.க., இரண்டு விஷயங்களை எப்போதுமே பொறுத்துக் கொள்ளாது. ஒன்று பயங்கரவாதம் மற்றொன்று ஊழல். இதை இரண்டையும் தவிர்த்த ஆட்சியை பா.ஜ.கே., வழங்கும். இவ்வாறு அத்வானி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

பொடுகு நீங்க

பொடுகு காரணமாக தலையில்_அரிப்பு போன்றவை ஏற்படும். இதுபோன்ற பொடுகு பிரச்னையை திர்க சில ...

எருக்கன் செடியின் மருத்துவக் குணம்

இலை நஞ்சு நீக்கி, வாந்தியுண்டாக்கியாகவும் வீக்கம் கட்டி குறைப்பானாகவும், பூ, பட்டை ஆகியவை ...