நன்னாரியின் மருத்துவ குணம்

 நன்னாரி வேரைப் பொடியாக வெட்டிக் கைப்பிடியளவும், கைப்பிடியளவு கொத்து மல்லி விதையையும் ஒரு சட்டியில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, அந்தக் கஷாயத்துடன் பால் சர்க்கரை சேர்த்துக் காலை, மாலையாக ஏழு நாட்கள் சாப்பிட்டால் பித்தக் கோளாறுகள் விலகும்.

இதே கஷாயத்தைக் குழந்தைகளுக்குக் காலை, மாலை சங்களவு கொடுத்து வந்தால் கணைச் சூடு குணமாகும்.

இதன் சுவை இனிப்பும், சிறு கைப்பும் உடையது. இதைப்போட்டு நன்றாக வெந்நீரில் கொதிக்க வைத்து நீரை வடிகட்டி தேன் கலந்து குடித்தால், உடல் வலுப்பெறும். உடலைத் தேற்றி வலு உண்டாக்கும். உடலைக் குளிற்சியடையச் செய்யும். வியர்வையையும், சிறுநீரையையும் பெருக்கும்.

நன்னாரி வேரை வெந்நீரில் ஊறவைத்து கஷாயமிட்டு 5 மில்லி 10 மில்லி வீதம் தினம் 2,3 வேளை கொடுத்துவர, நாட்பட்ட வாதம், மேகப்புடை, சருமரோகம், மந்தாக்கினி, அஜீரணம் இவை நீங்கும்.

வேரை உலர்த்திப் பொடித்துப் பசுவின் பால் சேர்த்து நீர் சுருக்கு முதலிய மூத்திர சம்பந்தமான வெப்ப நோய்களுக்குக் கொடுக்கலாம். மேற்படி நோய்களுக்கு நன்னாரி வேர், சீரகம் சேர்த்து குடி நீரிட்டும் குடிக்கலாம். நன்னாரி வேரை இடித்து 100 கிராம் எடுத்து ½ லிட்டர் வெந்நீர் விட்டு நான்கு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி அதில் 750 கிராம் சீனி சர்க்கரை சேர்த்து சிறிது இட்டு எரித்துப் பதத்தில் இறக்கி, வேளைக்கு 1-2 தேக்கரண்டி வீதம் நீரில் கலந்து உட்கொள்ள, அதி வெப்பம் தணியும், நன்னாரியை வாழை இலையில் சுற்றிக் கட்டுக் கும்பிச் சாம்பலுள் புதைத்து வைத்து எடுத்து நரம்பு நீக்கி, அத்துடன் வெல்லம், சீரகம் சேர்த்தரைத்துக் கொடுக்க மூத்திரத்தாரை ரோகம் நீங்கும்.

வேரின் இரசத்தைக் கண்ணில் விட கண்ணுக்குக் குளிர்ச்சியைத் தரும்.

நன்னாரி, அதிமதுரம், கோட்டம், வசம்பு, இவற்றைக் காடி விட்டரைத்து எண்ணெய் கலந்து மேல் பூசிவர, பித்தத்தால் உண்டாகும் ஒற்றைத் தலைவலி நீங்கும்.

இதை அரைத்துத் தேனில் பாகம் செய்துன்ன, அதி பித்தம் தீரும். இதைக் கற்றாளைச் சோற்றுடன் கலந்து உண்ண வண்டுகடி போகும்.

 

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., ...

கோவில்கள் மீதான தாக்குதல் ஆஸி., பிரதமரிடம் நரேந்திர மோடி வருத்தம். ஆஸ்திரேலியாவில் இந்து கோயில்கள்மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பாக ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், ...

தி.மு.க. என்றால் குடும்ப அரசியல், பணம், கட்டப்பஞ்சாயத்து கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப் பள்ளியில் பா.ஜனதா கட்சியின் மாவட்ட ...

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி

அவசரக்குடுக்கை ஆர் எஸ் பாரதி நான் இரட்டை வேடம் போடுவதாக, அவசரக்குடுக்கை ஆர் எஸ் ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இரு ...

திறனற்ற திமுகவுக்கு திராணி இருந்தால் என்னை கைதுசெய்யுங்கள் வடமாநில தொழிலாளர் குறித்து முதல்வர் ஸ்டாலின் பேசிய வீடியோவை ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மா ...

திரிபுரா, நாகலாந்து , மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பு திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு ...

வடமாநிலதவர்கள் மீதான வெறுப்பு ...

வடமாநிலதவர்கள் மீதான  வெறுப்புப் பிரச்சாரத்தை அனுமதிக்கமாட்டோம் தமிழகத்தில் வட இந்தியத் தொழிலாளர்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக, ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

சர்க்கரை நோயாளிகளின் காயங்களை ஆற்றக்கூடிய மருந்து தேன்

சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...