ஆடிட்டர் ரமேஷ் கொலை பா.ஜ.,வுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்

 ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்ட சம்பவம், பா.ஜ.,வுக்கு விடுக்கப்பட்டுள்ள சவால்,” என்று , பா.ஜ.க., மூத்த தலைவர் அத்வானி கருத்து தெரிவித்துள்ளார்.

சேலம் இரும்பாலையில் அமைந்துள்ள சுற்றுலா மாளிகையில், சேலம்மாவட்ட, பா.ஜ.க., மாநகர் மற்றும் புறநகர்மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்றுகாலை நடந்தது. பா.ஜ.க, மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.

இந்த கூட்டத்தில், பா.ஜ.க , மூத்த தலைவர் அத்வானி கலந்து கொண்டு பேசியதாவது:
சேலத்தில், ஆடிட்டர் ரமேஷ் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம், சேலம் மக்களிடையே மிகுந்தவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நான் ஆடிட்டர் ரமேஷ் வீட்டுக்கு செல்லும்போது, சாலையில் இருபுறத்திலும் நின்ற மக்களை பார்த்தேன். அப்போது அவர்கள் கவலை தோய்ந்த முகத்துடன் இருப்பதை கண்டேன்.

சாதாரணமான நேரத்தில் நான் வரும்போது என்னை பார்த்து மக்கள் உற்சாகமாக கையசைத்து, அத்வானிஜி என கூப்பிடுவர். முகம் சந்தோஷத்துடன் காணப்படும். ஆனால், இன்று அந்தநிலையை காண முடியவில்லை.

ஆடிட்டர் ரமேஷ் கொல்லப்பட்டசம்பவம் நமக்கு விடப்பட்டுள்ள சவால். இந்தசவாலை தைரியத்துடன் ஏற்றுக்கொண்டு, கட்சி வளர்ச்சிக்காக நிர்வாகிகள் பாடுபடவேண்டும். ஒவ்வொருவரும் கட்சியை வளர்ப்பதற்கு அர்ப்பணிப்புணர்வுடன் கொண்டுசெல்ல வேண்டும்.

ஆடிட்டர் ரமேஷ் கொலைசெய்யப்பட்ட சம்பவம், பத்திரிகைகள் மூலம் மக்கள் மத்தியில் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதற்காக பத்திரிகைகளுக்கு நன்றிதெரிவிக்கிறேன். சில மாதங்களில், லோக்சபாதேர்தல் வரப்போகிறது. அதற்குள் தமிழகத்தில், பா.ஜ.க., வை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டுசெல்வதில் நிர்வாகிகள் அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அவர் பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

பயமுறுத்தும் ப‌ன்றிக் காய்ச்சல்

ப‌ன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...