ஒரு தலைவரின் வாழ்க்கை மிககொடூரமாக துண்டிக்கப்பட்டு இருப்பது வேதனை

தமிழக பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். குற்றவாளிகளை விரைந்துதண்டிக்க வேண்டும் என்று நான் தமிழக அரசை வலியுறுத்துகிறென் என்று பாஜக தேசியதலைவரும் மத்திய அமைச்சருமான ஜேபி நட்டா தெரிவித்துள்ளார்.

தமிழக பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் (வயது 52). இவர் நேற்று வீட்டு முன் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது மர்ம கும்பலினர் 8 பேர் சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும்அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக 8 தனிப்படைகள் அமைத்து போலீசார் விசாரணைநடத்தினர். இதில், முதலில் சம்பவம் நடந்த 4 மணிநேரத்திற்குள் சென்னை அண்ணாநகர் காவல் நிலையத்தில் 8 பேர் சரணடைந்ததாக தகவல் வெளியானது. ஆனால் அவர்கள் 8 பேரும் காவல் நிலையத்தில் வந்து ஆஜராகவில்லை. காவல் துறையினரால் கைது செய்யப்பட்டவர்கள்தான் என்று போலீசார் தெரிவித்தனர்.

அந்தவகையில் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜேபி நட்டாவும் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது:-

தமிழக பகுஜன் சமாஜ்கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் கொலை ஒட்டுமொத்த தேசத்தையும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங்கை இழந்துவாடும் குடும்பத்தினர், நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். குற்றவாளிகளை விரைந்துதண்டிக்க வேண்டும் என்று நான் தமிழக அரசை வலியுறுத்துகிறென்.

சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு அதிகாரமளிப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தலைவரின் வாழ்க்கை மிககொடூரமாக துண்டிக்கப்பட்டு இருப்பது வேதனை அளிக்கிறது. திமுக மற்றும் காங்கிரஸ் ஏழைகள் மற்றும் விளிம்புநிலை மக்களை புறக்கணிக்கிறது என எல்லோராலும் அறியப்பட்டகூற்று ஆம்ஸ்ட்ராங்கின் கொலையின் மூலம் மீண்டும் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களும் இதேவிளிம்பு நிலை சமூகத்தை சேர்ந்தவர்கள்தான். எனவே 24 மணி நேரமும் அற்பஅரசியல் செய்வதை விடுத்து திமுக காங்கிரஸ் கூட்டணி சிறிதளவாவது ஏழைகள் மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீது கருணையும் அக்கறையும் காட்ட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் மற்றும் வாயுக் கோளாறுகள் நீங்க உணவுப் பொருட்கள்

ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ...

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

எருக்கின் மருத்துவக் குணம்

இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ...