வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம் காலாவதியாகிவிட்டது

 வெள்ளையன், கொள்ளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போன தினம் இன்று சுதந்திர தினம். 66 வருடங்களுக்கு முன் வெள்ளையன், கொள்ளையர்களிடம் நாட்டை ஒப்படைத்து விட்டு போன தினம்.

கோடிக் கணக்கான அப்பாவிகள் ரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து போராடி

பெற்ற சுதந்திரம் இன்று இந்தியாவின் மிகப் பெரும்பான்மையான, தனிமனித ஒழுக்கம் இல்லாத, லஞ்ச மற்றும் ஊழல் மலிந்த பெருச்சாளிகளுக்கு பயன் படுகிறது.

தன்னலம் இன்றி சேவை ஆற்றுவது என்பது இன்று பைத்தியக் காரத்தனமாக மாறிவிட்டது. ஒரு சிறு உதவி செய்தால் கூட பெரும்பான்மை மக்கள், அதை விளம்பரப்படுத்திக் கொண்டுதான் செய்கிறார்கள். தேசப்பற்றுக் கூட பகட்டுக்காக செய்யப்படும் பொருளாக மாறிவிட்டது. இந்தியன் என்கிற உணர்வு கூட கிரிக்கெட்டை தாண்டி வெளி வருவதில்லை.

பள்ளிக் கூடங்களில் கடனே என்று சுதந்திர தினம் கொண்டாடப் படுகிறது. மனப்பாடம் செய்யப்பட்ட தேசிய கீதம், உணர்வுகள் இல்லாமல் உளரப்ப‌டுகிறது. பல கோடி மக்களுக்கு சுதந்திரம் என்பது கொலைஞர் டீவியில் சொல்வது போல் வெறும் விடுமுறை தினமாக மாறிவிட்டது.

அன்று இந்திய தேசிய காங்கிரஸ் என்கிற ஒரு அற்புதமான தன்னலமற்ற இயக்கம் ஆட்சி பொறுப்பை ஏற்றது. இன்று அது இந்திய இத்தாலிய காங்கிரஸாக மாறி நாட்டை சூரையாடிக் கொண்டிருக்கிறது. ஜாதி, மதம், இனம் என மக்களை இந்த காங்கிரஸ் அரக்கன் பிரித்து மேலும் மேலும் ஊழல்களில் உலக சாதனை புரிந்துக் கொண்டிருக்கிறது. ஜாதியால், மொழியால், மதத்தால், இனத்தால் பிரிந்துள்ள பெரும்பான்மை மக்கள், இந்த அரக்கனை ஏறெடுத்தும் பார்க்காமல் கூட்டுப் புழுக்களாய் சுருங்கி கிடக்கிறார்கள்.

வெள்ளைக்காரனிடம் பெற்ற சுதந்திரம் காலாவதியாகிவிட்டது. இந்த காங்கிரஸ் கொள்ளைக்காரர்களிடம் இருந்து நாம் பெறப்போகும் சுதந்திரமே உண்மையான சுதந்திரம். தேசப்பற்றும், தேசிய சிந்தனையும் உள்ள கட்சியை தேந்தெடுத்து நாட்டை ஒப்படைப்பதே இன்று நம் தலையாய கடமை. அவ்வாறு செய்வதன் மூலமாகவே நாம் நிஜமான விடுதலையை பெற்றோம் என்று சொல்லிக் கொள்ளலாம்.

Thanks; Enlightened master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

உடல் பலம் பெற

100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ...