சந்திராயன் 3 விண்கலம் நிலவில் தரையிறங்கி ஓராண்டு நிறைவான நிலையில் தேசிய விண்வெளி தினம் இன்று கொண்டாடப்பட்டது

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்- 3 விண்கலத்தின் லேன்டர் வெற்றிகரமாக தரையிறங்கியதை கொண்டாடும் தினம் இன்று (ஆகஸ்ட் 23). இந்த நாள், தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படுகிறது.

நிலவை ஆய்வு செய்வதற்காக, சந்திரயான் – 3 விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக இந்தியா விண்ணில் ஏவியது.இந்த விண்கலத்தில் இருந்து வந்த லேண்டர், ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி மாலை 6:04 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

பிரக்யான் ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் இரண்டும் நிலவை ஆய்வு செய்த அந்த நாள், இந்திய விண்வெளி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள்.அதை கொண்டாடும் வகையில், ஆண்டு தோறும் ஆக.,23 தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி இன்று முதலாம் தேசிய விண்வெளி தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஓராண்டு நிறைவுயையொட்டி, நிலவு குறித்து சந்திரயான் 3 அனுப்பிய புதிய தகவல்களை இந்திய விண்வெளித் துறையின் ஆமதாபாத் இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தின் விஞ்ஞானிகள் குழு வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* நிலவின் தென் துருவத்தில் இறங்கி ஆய்வு செய்து வரும் சந்திரயான் 3, அங்கு ‘மாக்மா’ கடல் இருப்பதை கண்டுபிடித்துள்ளது. மாக்மா என்பது உருகும் பாறையின் பெரிய அடுக்குகள் ஆகும்.

*மாக்மா கடல் 4.3 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகியிருக்கலாம். பொதுவாக கோள்கள் உருவாகும் போது இவை காணப்படும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

* நிலவின் மேற்பகுதி கரடுமுரடான பாறைகளால் உருவாகி இருந்தாலும், சில இடங்களில் திரவம் போன்ற பொருள் மேற்பரப்பில் மிதந்து சென்றதற்கான வழித்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன.

* பிரக்யான் ரோவர் தரையிறங்கிய இடத்தைச் சுற்றி 50 மீட்டர் வரை மென்மையான மேற்பரப்புகள் உள்ளன. அந்த பகுதிகளில் பள்ளங்கள், பாறைகள் என ஏதும் இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஓராண்டுகள் நிறைவு பெறும் நாளான இன்று (ஆகஸ்ட் 23) பிரக்யான் ரோவர், லேண்டர் ஆய்வு செய்த தரவுகள் வெளியானது, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரச ...

ஒரே நாடு ஒரே தேர்தல் மத்திய அரசு தீவிரம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மூன்றாவது ஆட்சி காலத்தில், ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற ...

பிரதமர் வீட்டில் உள்ள பசு ஈன்ற கன்றுக்கு பிரதமர் தீபஜோதி என பெயரிட்டு மகிழ்ச்சி பிரதமர் மோடியின் இல்லம், டில்லியில் எண் 7 லோக் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

கறிவேப்பிலை | கறிவேப்பிலையின் மருத்துவ குணம்

கொத்துமல்லி, புதினா, போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக பயன்படுத்தி ...

கீரையில் இருக்கும் சத்துக்கள் வீணாகாமல் அப்படியே கிடைக்க

கீரையில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் வீணாகாமல் அப்படியே முழுமையாக கிடைக்க, முதலில் கீரைகளை ...