தெலங்கானா அமைந்துவிட்டால் அமைதி திரும்பிவிடும்

 தெலங்கானா தனி மாநிலம் அமைவதற்கான மசோதாவை மேலும் கால தாமதம் செய்யாமல் நடப்புக் கூட்டத்தொடரிலேயே கொண்டுவர வேண்டும் என ஐ.மு.,கூட்டணி அரசை மக்களவை எதிர்க் கட்சித் தலைவர் சுஷ்மாஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

தெலங்கானா அமைவதற்கான அறிவிப்பின் மூலம் தெலங்கானா ஆதரவுதலைவர்களை சமாதானப்படுத்த காங்கிரஸ்கட்சி முயல்கிறது. மாறாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தனது செயலற்றதன்மை மூலம் ஒருங்கிணைந்த ஆந்திர ஆதரவு தலைவர்களின் ஆதரவை தக்கவைத்து கொள்ள முயல்கிறது.

காங்கிரஸ் மற்றும் மத்திய அரசின் வெவ்வேறானசெயல்பாடு மக்களை ஏமாற்றும் நாடகம். இந்த இரட்டைநிலைப்பாடு தெலங்கானா ஆதரவாளர்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் அமைவதை பாஜக ஆதரிக்கிறது. இந்த நிலைப்பாட்டில் எந்த சூழ் நிலையிலும் மாற்றம் இல்லை. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா கொண்டுவரப்பட்டால் அதனை முழுமனதுடன் ஆதரிப்போம்.

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரை செப்டம்பர் 5-ம் தேதி வரை நீட்டிக்க அரசுவிரும்புகிறது. முன்னதாக பட்டியலில் இடம்பெறாத மசோதாக்களையும் கொண்டுவரும் திட்டமும் அரசுக்கு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் நடப்புக் கூட்டத்தொடரிலேயே தெலங்கானா மாநிலம் அமைவதற்கான மசோதாவை அரசு கொண்டு வரவேண்டும் என்பதே எங்களது கருத்து.

தெலங்கானாமாநிலம் அமைவது வேண்டுமென்றே கால தாமதம் செய்யப் படுகிறதோ என்ற சந்தேகமும் உள்ளது. இதற்கு காங்கிரஸ்கட்சியும், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் துணை போகக்கூடாது என்பதே பா.ஜ.க.,வின் கோரிக்கை.

தெலங்கானா அமைந்துவிட்டால் ஆந்திரத்தில் படிப்படியாக அமைதி திரும்பிவிடும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

கெட்ட கொழுப்பை குறைக்கும் ஓட்ஸ்

உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.