அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகதான் தெரியும்

 தேர்தல் கருத்துக் கணிப்புகளை தடைசெய்ய வேண்டும், குளத்தில் மலர்ந்திருக்கும் தாமரைகளை எல்லாம் தார்ப்பாய் போட்டு மூடவேண்டும். என்று பைத்தியகாரனோ, புத்தி சுவாதினமற்றவனோ கூறவில்லை . தங்களை புத்திசாலிகளாக காட்டிக்கொள்ளும் காங்கிரஸ் கட்சியும் அதன் அடிபொடிகளும் தான் இவ்வாறு கூறிவருகின்றனர்.

சமீபத்தில் தனியார் செய்திநிறுவனங்கள் நடத்தி வரும் கருத்து கணிப்புகளில் பாஜக தலைமையிலான கூட்டணியே பெருவாரியான தொகுதிகளை கைப்பற்றும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன . அதாவது ஆளும் காங்கிரஸ் அரசின் போலி வளர்ச்சி விளம்பரங்களை ஒளிபரப்பி பல கோடி ஆதாயம் பெற்ற இந்த செய்திநிறுவனங்கள் தங்கள் கருத்து கணிப்புகளில் கடுமையாக முயன்றும் பாஜக.,வை 160 தொகுதிகளுக்கு கீழும் காட்டமுடியவில்லை. காங்கிரஸ்சை 120 தொகுதிகளுக்கு மேலும் காட்ட முடியவில்லை .

இப்படி இட்டுக்கட்டிய தங்களுக்கு சாதகமான செய்தி நிறுவனங்கள் நடத்தும் கருத்துக் கணிப்புகளே தங்களுக்கு பாதகமாக போகும்போது உண்மை நிலவரம் 80தை தாண்டாது என்று வந்துவிட்டால் என்ன செய்வது?. வழியில்லாமல் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் ஒரு சில கூட்டணி கட்சிகள் (கூட்டு களவாணிகள்) ஓடிவிடுமே!, நீட்டிய திசையெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் சிபிஐ என்ற குதிரை ஓட்டத்தை நிருத்திவிடுமே! என்று பல வழிகளிலும் சிந்தித்து பயந்துதான் நடுங்குகிறது.

காங்கிரஸ்ஸின் பயம் பாஜக என்ற கட்சியுடோனோ , நரேந்திர மோடி என்ற அதன் பிரதமர் வேட்பாளருடனோ, கருத்துக்கணிப்பு என்ற பாஜக.,வுக்கு சாதகமான மக்களின் என்ன ஓட்டத்துடனோ மட்டும் நின்றுவிடவில்லை. பாஜக.,வின் சின்னம் தாமரை என்பதால் குளத்தில் இயற்கையாகவே மலர்ந்திருக்கும் தாமரைகளையும் கண்டு அஞ்சுகிறது. அதை தார்ப்பாய் போட்டு மூடவேண்டும் என்கிறது.

ஆக மொத்தத்தில் அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேயாகதான் தெரியும் என்பார்கள். அதேபோன்று காங்கிரஸ்க்கு பார்ப்பதெல்லாம் தோல்வியாகத்தான் தெரிகிறது.
மக்களிடம் தங்கள் ஊழல் கறைபடிந்த கரத்தை உயர்த்தி தங்கள் கை சின்னத்தை காட்டி ஒட்டு சேகரிக்க வேண்டுமானால் காங்கிரஸ் தயங்கலாம். ஆனால் மக்களோ ஊழல் கறை படிந்த காங்கிரஸ்க்கு எதிராக தாமரையை பாரதத்தில் மலரச்செய்ய தங்கள் கை விரலை என்றோ உயர உயர்த்திவிட்டார்கள் , தேர்தல் வரவிருக்கும் நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள் என்பதே உண்மை.

தமிழ் தாமரை VM வெங்கடேஷ்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக் ...

நாட்டில் ஊழலை முற்றிலும் ஒழிக்க பாஜக உறுதிபூண்டுள்ளது மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்காக ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

மருத்துவ செய்திகள்

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...