காங்கிரஸூக்கு அளிக்கப்பட்டுள்ள தேசியக்கட்சி அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும்

 தேர்தல் நடத்தை விதி முறைகளை தொடர்ந்து மீறிவரும் காங்கிரஸூக்கு அளிக்கப்பட்டுள்ள தேசியக்கட்சி அங்கீகாரத்தை ரத்துசெய்யக் கோரி, தேர்தல் ஆணையத்திடம் பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ்நக்வி தலைமையிலான குழுவினர் முறையிட்டுள்ளனர்.

அவர்கள் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பது:

கடந்த 16ம்தேதி நடைபெற்ற, சத்தீஸ்கர் பேரவைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பாஜக.,வினரைத் திருடர்கள் என்றும், கொள்ளையர்கள் என்றும் தரக் குறைவாகப் பேசினார்.

அதே போல, கடந்த 17ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற தேர்தல்பிரசாரக் கூட்டத்தில் பேசுகையில், கர்நாடகத்திலும், மகாராஷ் டிரத்திலும் சமூகரீதியான பதற்றத்தை பா.ஜ.க ஏற்படுத்தியது என்றுவிமர்சித்தார்.

சத்தீஸ்கரில் கடந்த மே 25ஆம் தேதி மாவோயிஸ்டுகள் நடத்தியதாக்குதலில் மாநில காங்கிரஸ் தலைவர் நந்தகுமார் படேல் உள்பட அந்தக்கட்சியின் பல தலைவர்கள் உயிரிழந்தனர். இந்தச்சம்பவத்துக்கு நக்ஸலைட்டுகள் தான் முழுப் பொறுப்பு. ஆனால், இந்த சம்பவத்துக்கு பாஜக.,தான் காரணம் என்பது போல ராகுல்காந்தி பேசி வருகிறார்.

இப்படி பா.ஜ.க மீது எந்த ஆதாரமும் இல்லாத, பொய்யான, அவதூறானபுகார்களை அவர் பரப்பிவருகிறார். அவரது இத்தகைய தரம்குறைந்த பேச்சுக்கு அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சி எதிர்ப்புதெரிவித்திருக்க வேண்டும். கண்டித்திருக்க வேண்டும். ஆனால், மாறாக அவரதுபேச்சை ஊக்குவிக்கும் வகையில் ஆதரித்துவருகிறது.

ராகுல்காந்தியின் பொய்யான பிரசாரத்தால் பாஜக குறித்து மக்கள்மனதில் தவறான எண்ணம் உருவாக வாய்ப்புள்ளது. அவரது பொறுப்பற்றபிரசாரம் தேர்தல் ஆணையத்தை அவமதிப்பதாகவும் உள்ளது. எனவே, தொடர்ந்து தேர்தல்நடத்தை விதிமுறைகளை மீறிவரும் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ள தேசியக்கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்துசெய்ய வேண்டும்.

அந்தக்கட்சிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இதுவே சரியானதருணம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பா,ஜ,க,,வின் பிரதமர்வேட்பாளர் நரேந்திர மோடியை பொய்யர் என்று சித்திரிக்கும்வகையில், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ்கட்சி விளம்பர பலகைகளை வைத்துள்ளது. அதில், “மோடியின் பொய்களை ரசிக்கமட்டும் செய்யுங்கள்; வாக்குகளை காங்கிரஸக்கு அளியுங்கள்’ என்றவாசகமும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், இந்த விளம்பரத்தின் புகைப் படத்தையும் தலைமைத்தேர்தல் ஆணையரை சந்தித்த போது அதை அளித்து நடவடிக்கை எடுக்கக்கோரினர்.

இதைத் தொடர்ந்து, முக்தார் அப்பாஸ்நக்வி செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது சத்தீஸ்கர் மாநில தேர்தல் பிரசாரக்கூட்டதில் நரேந்திரமோடி பேசுகையில், “ரத்தக் கறை படிந்த கரம் சத்தீஸ்கரில் ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது. அதற்கு மக்கள் இடமளிக்க கூடாது’ என்று பேசினார்.

அவர் யாரையும் தனிப்பட்டரீதியில் விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் சின்னத்தையே (“கை’) விமர்சித்தார். இது குறித்து தேர்தல் ஆணையத்துக்கு தெளிவுபடுத்தி விட்டோம். தேர்தல்பிரசாரத்தில் எந்த ஒருகட்சியின் சின்னத்தை விமர்சிப்பதில் தவறில்லை.

காங்கிரஸ் விரும்பினால் பா.ஜ.க.,வின் சின்னத்தையும் விமர்சிக்கட்டும். அதற்கு அந்தக்கட்சிக்கு சுதந்திரம் உண்டு என்றார் முக்தார் அப்பாஸ்நக்வி.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவ� ...

பெண் சக்தியின் அடையாளமாக மாறிவிட்டது ஆபரேஷன் சிந்தூர்: பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் போபால், ஆபரேஷன் சிந்தூர் இந்தியாவின் 'பெண் சக்தி'யின் அடையாளமாகவும் ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பி� ...

தெலுங்கானா மாநில மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெலுங்கானா மாநில நாளான இன்று அம்மாநில மக்களுக்கு பிரதமர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர் ...

பிரதமர் நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் மசாடோ காண்டாவுடன் சந்திப்பு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு � ...

ஒரு குண்டு வீசினால், பதிலுக்கு பல குண்டுகள் பாயும் – பிரதமர் மோடி "பயங்கரவாதத்தின் மூலம் நடத்தப்படும் மறைமுகப் போர்களை இந்தியா ஒருபோதும் ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிக� ...

தீவிரவாதிகளை ஆதரிப்போரும் மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டும் இந்திய வரலாற்றில் தீவிரவாதத்துக்கு எதிரான மிகப் பெரிய ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரத ...

டில்லி வந்த பராகுவே அதிபர் பிரதமர் மோடியுடன் சந்திப்பு 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ள பராகுவே அதிபர் ...

மருத்துவ செய்திகள்

ஆஷ்த்துமாவுக்கான உணவு முறைகள்

"ஆஸ்துமா" நுரையீரலிலுள்ள சுவாச சிறுகுழல்களைப் பாதிக்கும் நோயாகும். திடீரென சுவாச சிறுகுழல்கள் சுருங்குவதால் ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...