முசாஃபர் நகரில் லஷ்கர்-இ தொய்பா

 பாகிஸ்தானை சேர்ந்த லஷ்கர்-இதொய்பா பயங்கரவாத இயக்கத்தினர் தங்களது இயக்கத்துக்கு ஆள்சேர்ப்பதற்காக, உத்தரப் பிரதேசத்தில் அண்மையில் கலவரம் நடந்த முசாஃபர் நகரில் உள்ளவர்களைத் தொடர்புகொண்டதாக தில்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

தில்லி காவல் துறை பயங்கரவாதிகள் தடுப்புப்பிரிவின் சிறப்பு ஆணையர் எஸ்என். ஸ்ரீவாஸ்தவா செய்தியாளர்களிடம் செவ்வாய்க் கிழமை இதுபற்றி கூறியதாவது:

முசாஃபர் நகரில் வசித்துவரும் ஜமீர், லியாகத் ஆகிய இருஇளைஞர்களை தில்லி போலீஸார் அண்மையில் கைதுசெய்தனர். மசூதிகட்டுவதற்கு பணம் சேர்ப்பதாக கூறிக்கொண்டு இருவரும் ஆள்கடத்தல், வழிப்பறி ஆகியசெயல்களில் ஈடுபட்டு வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் இருவர் உள்ளிட்ட முசாஃபர் நகர்வாசிகள் சிலரிடம், இந்தியாவுக்கு எதிராக நாச வேலையில் ஈடுபட வேண்டும் என்று அடையாளம் தெரியாதநபர்கள் மூளைச்சலவை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தங்களுக்கு ஒத்துழைப்பாக நடந்துகொண்டால் செல்வச்செழிப்புடன் கூடிய வசதிகள் செய்துதரப்படும் என்று ஆசைவார்த்தைகளை சில நபர்கள் கூறியுள்ளதாக ஜமீரும், லியாகத்தும் விசாரணையில் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்திய பிறகு தில்லி பாடியாலா நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்கு மூலம் பதிவுசெய்யப்பட்டது என்றார்.

இதுபற்றி பா.ஜ.க தேசிய தலைவர் ராஜ்நாத்சிங் கூறுகையில், இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னை. ஆகையில் இந்தவிவகாரம் குறித்து முழுமையான விசாரணைதேவை” என்றார்.

பா.ஜ.க செய்தித்தொடர்பாளர் பிரகாஷ் ஜாவடேகர் கூறுகையில், பாகிஸ்தானின் உதவிபெறும் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு, எந்த அளவுக்கு உத்தரப்பிரதேசத்தில் வேறூன்றியிருக்கிறது என்பது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. இது ஒரு தேசியபிரச்னை. இந்த விவகாரத்தில் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவோ, கண்டுபிடிக்கப்படவோ இல்லை. இது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது” என்று கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...

ஆடாதொடையின் மருத்துவ குணம்

ஆடாதொடை இலையை தேவையான அளவு எடுத்து ஒரு சட்டிக்கு வேடுகட்டி, ஒரு டம்ளர் ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...