கிரண்குமார் ரெட்டி, எந்த நேரத்திலும் பதவி விலகலாம்

 தெலுங்கானா தனிமாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, ஆந்திரமாநில, காங்கிரஸ் முதல்வர், கிரண்குமார்ரெட்டி, எந்த நேரத்திலும் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், தன் ஆதரவாளர்களுடன், காங்கிரசிலிருந்து விலகி, தனிக் கட்சி துவங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத வலுப்படுத்தும் விதத்தில் அந்த மாநில சமூகநலத்துறை அமைச்சர் பி. சத்யநாராயணாவின் கருத்து அமைந்துள்ளது. . இதுகுறித்து அவர் கூறியதாவது:

தொடர்ந்து நாங்கள் பதவியில் நீடிக்கவிரும்பவில்லை. 2013ஆம் ஆண்டு ஆந்திர மறுசீரமைப்பு மசோதா (தெலங்கானா மசோதா) மீதான விவாதம் சட்டப் பேரவையில் முடிவுபெற்றதும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமாசெய்ய தயாராக இருக்கிறோம்.

முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் தமதுபதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கூடும். ஐக்கிய ஆந்திரத்துக்காகப் பாடுபடும் ஒரு அரசியல்கட்சி வேண்டுமென்று, சீமாந்திரா பகுதியைச்சேர்ந்த மக்கள் விரும்புகின்றனர்.

அதே சமயம், இது வரை தனிக் கட்சி தொடங்கவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. ஆந்திர மறு சீரமைப்பு மசோதா மீது சட்டப் பேரவையில் விவாதம் நடத்தி திருப்பி அனுப்புவதற்கு, மேலும் 60 நாள் அவகாசம்வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கேட்க இருக்கிறோம் என்று சத்ய நாராயணா கூறினார்.

இதனிடையே, காங்கிரஸ்சில் இருந்து விலகி புதியகட்சியை தனது ஆதரவாளர்களுடன் கிரண்குமார்ரெட்டி எந்த நேரத்திலும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேகருத்தை வலியுறுத்தி சீமாந்திரா பகுதிகளில் பிரசாரமும் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பழங்களை பயன்படுத்தும் முறை

பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ...

ஆல்பொகாடா பழம்

இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ...

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...