கிரண்குமார் ரெட்டி, எந்த நேரத்திலும் பதவி விலகலாம்

 தெலுங்கானா தனிமாநிலம் அமைக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து, ஆந்திரமாநில, காங்கிரஸ் முதல்வர், கிரண்குமார்ரெட்டி, எந்த நேரத்திலும் பதவி விலகுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர், தன் ஆதரவாளர்களுடன், காங்கிரசிலிருந்து விலகி, தனிக் கட்சி துவங்கும் திட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத வலுப்படுத்தும் விதத்தில் அந்த மாநில சமூகநலத்துறை அமைச்சர் பி. சத்யநாராயணாவின் கருத்து அமைந்துள்ளது. . இதுகுறித்து அவர் கூறியதாவது:

தொடர்ந்து நாங்கள் பதவியில் நீடிக்கவிரும்பவில்லை. 2013ஆம் ஆண்டு ஆந்திர மறுசீரமைப்பு மசோதா (தெலங்கானா மசோதா) மீதான விவாதம் சட்டப் பேரவையில் முடிவுபெற்றதும், சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமாசெய்ய தயாராக இருக்கிறோம்.

முதல்வர் கிரண்குமார் ரெட்டியும் தமதுபதவியில் இருந்து ராஜினாமா செய்யக்கூடும். ஐக்கிய ஆந்திரத்துக்காகப் பாடுபடும் ஒரு அரசியல்கட்சி வேண்டுமென்று, சீமாந்திரா பகுதியைச்சேர்ந்த மக்கள் விரும்புகின்றனர்.

அதே சமயம், இது வரை தனிக் கட்சி தொடங்கவேண்டும் என்று நாங்கள் விரும்பவில்லை. ஆந்திர மறு சீரமைப்பு மசோதா மீது சட்டப் பேரவையில் விவாதம் நடத்தி திருப்பி அனுப்புவதற்கு, மேலும் 60 நாள் அவகாசம்வேண்டும் என்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் கேட்க இருக்கிறோம் என்று சத்ய நாராயணா கூறினார்.

இதனிடையே, காங்கிரஸ்சில் இருந்து விலகி புதியகட்சியை தனது ஆதரவாளர்களுடன் கிரண்குமார்ரெட்டி எந்த நேரத்திலும் தொடங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதேகருத்தை வலியுறுத்தி சீமாந்திரா பகுதிகளில் பிரசாரமும் நடைபெற்று வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

இளநீரின் மருத்துவ குணம்

காலராவின்போது, வாந்திபேதி இருப்பதால் உடலிலுள்ள நீர்ச்சத்து குறையும். கூடவே முக்கியமான தாதுஉப்புகளும் வெளியேறிவிடும். ...