கடவுளால் கூட பலாத்காங்களை தடுத்து நிறுத்த முடியாது

 உ.பி.,யில் பெண்களுக்கு எதிரான வன் கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஆளுநர் அஜிஸ் குரேஷி, கடவுளால் கூட பலாத்கார சம்பவங்களை தடுத்து நிறுத்தமுடியாது என்று தெரிவித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

சமீபத்தில் லக்னோவின் மோகன்லால் கங் பகுதியில் 35 வயது பெண் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக முதல்வர் அகிலேஷ் யாதவ், ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தியபிறகு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

“பலாத்காரம் போன்ற குற்றங்களுக்காக அரசாங்கத்தை ஊடகங்கள் கண்டிக்கக்கூடாது. உத்தர பிரதேசத்தில் இத்தகைய குற்றங்களை ஆண்டவனால் கூட தடுத்து நிறுத்த முடியாது. உலகம் முழுவதிலும் இருந்து போலீசாரை கொண்டு வந்து உத்தர பிரதேசத்தில் குவித்தாலும் அவர்களால் பலாத்கார சம்பவங்களை தடுக்கமுடியாது என்றும் அவர் குறிப்பிட்டார். அவரது கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவரது பேச்சுக்கு பாஜக., கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இவர் நேற்றுடன் (21.07.20#14) பதவி விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சிலநாட்களுக்கு முன்னர் முதல்வர் அகிலேஷ் தந்தையான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங், பலாத்காரம் என்பது உபி., மக்கள் தொகையை பார்க்கும்போது குற்றச்செயல்கள் அளவு குறைவுதான் என்றார். இவருக்கு ஆதரவாக இவரதுகட்சி எம்.பி,. ஒருவர் கூறுகையில், பலாத்காரம் வறுமை காரணமாகவும், மக்கள்தொகை அதிகரிப்பு காரணமாகவும் நடக்கிறது என்றார். இதுபோல் மற்றொரு கட்சி நிர்வாகியான ஒருவர், பலாத்காரம் முன் கூட்டியே தடுத்துவிட முடியாது. இதுகுறித்து யாருக்கும் முன்கூட்டியே தகவல்கள் கிடைப்பதில்லை என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால ...

டில்லியில் குடிநீர் இல்லை ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது மோடி குற்றம்சாடியுள்ளார் 'டில்லியில் குடிநீர் இல்லை. ஆனால் ஆல்கஹால் கிடைக்கிறது' என ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

மருத்துவ செய்திகள்

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...

சிறுநீரக அழற்சி நோய் உள்ளவர்களுக்கான உணவு முறைகள்

நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ...

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...