பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு அனைத்து கட்ச் கூட்டம் நடத்தப்படுமா? அண்ணாமலை கேள்வி

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: தி.மு.க.,விற்கு, மேடை போட்டு பா.ஜ.,வை விமர்சனம் செய்வதே வேலையாகி விட்டது. மக்கள் பிரச்னைகளை பற்றிப் பேச அவர்களுக்கு நேரமில்லை.

விகிதாச்சார அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வதில் தமிழகத்திற்கு லோக்சபா தொகுதிகள் குறையும் என்கிறார், முதல்வர் ஸ்டாலின்.

அதுபோன்று தொகுதிகள் குறையாது என பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் உறுதியளித்துவிட்டனர். பிரச்னையே எழாதபோது, அது குறித்து பேசுவதற்கு எதற்கு அனைத்துக்கட்சி கூட்டம்? அங்கு போய் பேச எதுவும் இல்லை என்பதால், பா.ஜ., புறக்கணிக்கிறது.

தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு பிரச்னை, பாலியல் சம்பவங்களை கட்டுப்படுத்த அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தினால், முதல் ஆளாக பா.ஜ., பங்கேற்கும். மும்மொழி கற்பிக்கும் பள்ளியில், தாய்மொழியான தமிழில் தான் படித்தேன்.

ஆனால், முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு அதெல்லாம் தெரியாது; காரணம் அவர் படிக்காதவர்.

இலங்கையில், புதிய அரசு பதவியேற்ற பின், தமிழக மீனவர்களுக்கு சிக்கல் அதிகமாகி உள்ளது; பலர் கைது செய்யப்படுகின்றனர். மீனவர்கள் என்ற போர்வையில், சிலர் கடத்தல் தொழில் செய்கின்றனர்.

அவர்களை, நம் கடலோர காவல்படையினர் தடுத்து நிறுத்த வேண்டும். மீனவர்கள் பிரச்னை குறித்து, தமிழக மீனவர்களுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும்.

இருநாட்டு அமைச்சர்கள், மீனவர்கள், அதிகாரிகள் இணைந்து விரைவில் கூட்டுக்கூட்டம் நடத்தப்பட்டு மீனவர்கள் கைது பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

“தாழ்நிலை சர்க்கரை” – சில செய்திகள் (HYPOGLYCEMIA)

நீரிழிவுநோய் உடையவர்களுக்குப் பல்வேறு காரணங்களால் திடீரென இரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவு குறைந்து விடும். ...

உறக்கத்தின் முக்கியத்துவம்

மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...