அனைவருக்கும் வங்கி கணக்கு 28ந் தேதி டெல்லியில் பிரதமர் தொடங்கி வைக்கிறார்

 அனைவருக்கும் வங்கிகணக்கு தொடங்கும் திட்டத்தை 28ந் தேதி டெல்லியில் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர தின உரையில், 'பிரதான் மந்திரி ஜன்–தான் யோஜனா' (பிரதமர் மக்கள்–நிதி திட்டம்) என்ற திட்டத்தை அறிவித்திருந்தார். நாட்டில் உள்ள அனைவருக்கும் வங்கிகணக்கு தொடங்குவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டது.

இத்திட்டத்தை 28ந் தேதி டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். அதேநாளில் இத்திட்டம் நாடுமுழுவதும் தொடங்கி வைக்கப்படும்.

மாநில, மாவட்ட அளவில் நடைபெறும் தொடக்க நிகழ்ச்சிகளில், மத்திய மந்திரிகள் கலந்துகொண்டு தொடங்கி வைப்பார்கள்.

மேலும், அனைவருக்கும் வங்கிகணக்கு அளிப்பதற்காக, கிளைகள் தோறும் வங்கிகள்சார்பில் முகாம்கள் நடத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ், வங்கிகணக்கு தொடங்குவதற்கு 'ஆதார்' அட்டை இருந்தால், வேறு ஆவணங்கள் தேவையில்லை. வங்கிகணக்கு தொடங்கிய பிறகு, அவர்களுக்கு ஏ.டி.எம். கார்டு வழங்கப்படும். அதைவைத்து நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்.களில் பணம் எடுத்துக்கொள்ளலாம்.

ஒரு லட்சம் ரூபாய்க்கான விபத்துகாப்பீடும் வழங்கப்படும். ஓய்வூதியம், காப்பீடு போன்ற வசதிகளும் அளிக்கப்படும். மத்திய, மாநில அரசுகள் அளிக்கும் நிதி உதவிகளை, வங்கிகணக்கு மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த திட்டம் குறித்து அனைத்து வங்கி அதிகாரிகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி இமெயில் மூலம் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:–

நாடுமுழுவதும் 7 கோடி குடும்பத்தினருக்கு நாம் வங்கிகணக்கு தொடங்கவேண்டும். இதை தேசிய முன்னுரிமை பணியாக கருதவேண்டும். இது கடினமான பணியாக இருந்தாலும், இந்த சவாலை சந்திக்கவேண்டும்.

இன்னும் பலருக்கு வங்கிகணக்கு இல்லாததால், வளர்ச்சிபணிகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே, இதை அவசரபணியாக கருதி செய்ய வேண்டும். நாட்டில் வங்கி கணக்கு இல்லாதவர்கள் யாரும் விடுபடாதவாறு தாங்கள் பணியாற்ற வேண்டும்.

வங்கிகணக்கு இருந்தால், கடன் வசதியை பெற்று, அந்தமக்கள், வட்டிக்கு பணம் கொடுப்பவர்களின் பிடியில் இருந்து விடுபடுவார்கள்.என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

துளசியின் மருத்துவக் குணம்

எந்த வகை விஷத்தையாவது, சாப்பிட்டு விட்டதாகத் தெரிந்தால், துளசி இலையைக் கொண்டு வந்து ...