விமான நிலையங்களில் வி.வி.ஐ.பி.க்கள் பந்தாவுக்கு முடிவு

 விமான நிலையங்களில் வி.வி.ஐ.பி.க்கள் இனிமேல் வழக்கமான பந்தாவுடன் செல்லமுடியாது. அவர்கள் வழக்கமான பாதையைவிட்டு சிறப்பு பாதையில் செல்லும் சலுகைளை ரத்துசெய்ய மத்திய அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

விமான நிலையங்களில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட மிகமுக்கிய பிரமுகர்களுக்கு(விவிஐபி) சிறப்பு சலுகைகள் அளிக்கப்படுவது வழக்கம். விமான நிலையத்திற்குள் அவர்கள் நுழையும் போது ஏராளமான அதிகாரிகள் காத்திருந்து அவர்களை வரவேற்பார்கள். இதனால், பிறபயணிகளுக்கு இடையூறு ஏற்படும். கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் காங்கிரஸ்கட்சி தலைவர் சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேராவுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கப்பட்டதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இந்நிலையில், விமான நிலையங்களில் வி.வி.ஐ.பி.,க்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிப்பதால் மற்றபயணிகள் பாதிக்கக் கூடாது என்று விமானநிலைய அதிகாரிகளுக்கும், ஏர்இந்தியா அதிகாரிகளுக்கும் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் அசோக்கஜபதி ராஜு உத்தரவிட்டிருக்கிறார். இதுதொடர்பாக, விமான நிலைய அதிகாரிகளுக்கும், ஏர் இந்தியா அதிகாரிகளுக்கும் அசோக் கஜபதி ராஜு ஒருகடிதம் அனுப்பியிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அமைச்சர்கள் உள்பட அரசியல் பிரமுகர்களை வரவேற்பதற்காக ஏராளமானோர் வருவதாலும், அதிகாரிகள் மொத்தமாக கூடி நிற்பதாலும் மற்றபயணிகள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, வி.வி.ஐ.பி.,க்களையும் மற்றபயணிகளை போலவே நடத்த வேண்டும்.

விமான நிலையத்திற்கு நான் வரும்போது என்னை வரவேற்க ஓரிரு அதிகாரிகள் வந்தால்போதும். அதே போல், விமானத்திற்குள் ஏறச்செல்லும் போது வழக்கமாக பயணிகள் பயன்படுத்தும் விமான நிலைய பஸ்சையே நானும் பயன் படுத்துவேன். விமானம் வரை தனிவாகனம் எனக்கு தேவையில்லை. மற்ற சிறப்பு சலுகைகளும் எனக்கு தேவையில்லை. இதையே மற்ற விஐபிக்களும் பின்பற்றவேண்டும்.அதே நேரத்தில் பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்டவர்களுக்கு தேவையான பாதுகாப்பு விதி முறைகளில் எந்த மாற்றமும் இருக்ககூடாது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், விமான போக்கு வரத்து துறை அமைச்சர் தனக்கு சிறப்புசலுகைகள் தேவையில்லை என உத்தரவிட்டிருப்பதன் மூலம் மற்ற அமைச்சர்களுக்கும் இது பொருந்தும் என்றார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக் ...

ஆளுநராக இருந்த நான், உங்கள் அக்காவாக வந்திருக்கின்றேன் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் தென்சென்னை தொகுதியில் தமிழிசை ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக் ...

டீ குடிப்பது என்றாலும் சொந்தக்காசில் குடிப்போம் 2019 தேர்தலில் அளித்த 295 வாக்குறு திகளையும் பாஜக ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆய ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை  கொண்டுவந்துள்ளோம் தமிழகத்தில் அமைந்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி, தமிழகத்தினுடைய ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் ப ...

ஒரு லட்சம் பெண்களுக்கு வேளாண் பணி சார்ந்த ட்ரோன் மத்திய அரசு சார்பில் கடந்த2022-ம் ஆண்டு ‘நமோ ட்ரோன் ...

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’

ரயில்வேயில் ‘மேட் இன் இந்தியா’ நாட்டில் கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற ஆட்சி வெறும் ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொட ...

10 புதிய வந்தே பாரத் ரயில்களை கொடியசைத்து தொடங்கி வைத்த பிரதமர் ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறைக்கு பெரும் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கன்னம் குண்டாக வேண்டுமா ?

உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ...