சீன பட்டாசுகளை யார் விற்றாலும் உடனே புகார் செய்யுங்கள்

 மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது: சீனாவில்லிருந்து கண்டெய்னர் கண்டெய்னராக பட்டாசுகள் இந்தியாவிற்கு வருகின்றன. அவை விலைகுறைவாக உள்ளன. அவற்றை பதுக்கி வைத்துக் கொண்டு பட்டாசுகள் கேட்கும்போது அவை விற்கப்படுகின்றன அதனால் சிவகாசி பட்டாசுகள் விற்பனை பாதிக்கப்படுகின்றன என்று புகார்தெரிவித்தனர்.

உடனடியாக மத்திய அரசு, இந்தபுகார் குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது சீனா உள்ளிட்ட எந்த வெளிநாடுகளில் இருந்தும் பட்டாசுகளை இந்தியாவிற்குள் இறக்குமதிசெய்ய யாருக்கும் அனுமதி வழங்கவில்லை.

அந்த பட்டாசுகளால் விபத்து உருவாக வாய்ப்பு அதிகம். அந்த பட்டாசுகளால் பாதுகாப்பு இல்லை. எனவே சீன பட்டாசுகளை யார் வைத்து விற்றாலும் உடனே போலீஸ் நிலையத்தில் புகார் செய்யுங்கள். கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கும் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு கர்நாடக நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது குறித்து எதுவும் பேச விரும்பவில்லை. காரணம் இது நீதிமன்ற தீர்ப்பு. பொதுமக்களை பாதிக்காத வகையில் சம்பவங்கள் நடக்க வேண்டும். பொதுமக்களின் முன்னேற்றத்திற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது. வன்முறை எங்கும் இருக்கவேண்டாம் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கறிவேப்பிலையின் மருத்துவக் குணம்

கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ...

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வேப்பையின் மருத்துவ குணம்

நம் தாய் திருநாட்டில் சக்தி என்றும் பராசக்தி என்றும் வேம்பு என்றும் ...