தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமைவழங்க தயார்

 தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமைவழங்க தயாராக உள்ளதாக மத்திய உணவு, பொதுவிநியோகத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.

இந்திய உணவுக்கழக அதிகாரிகளுடனான கலந்தாய்வு கூட்டத்தில் பங்கேற்பதற்காக வியாழக் கிழமை அவர் சென்னைவந்தார். அப்போது நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பாஸ்வான் பேசியது:

உணவுப் பாதுகாப்புச் சட்ட த்தினை அனைத்து மாநிலங்களிலும் அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் 11 மாநிலங்களில் இந்தச்சட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. இந்தச்சட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகளை பொருளாதார அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் பணிகளை மாநிலஅரசுகள் மேற்கொள்ளும்.

கடந்த அக்டோபர் 4-ம் தேதிக்குள் உணவு பாதுகாப்புச் சட்டத்தை அமலாக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப் பட்டிருந்தது. தற்போது அந்தகால அவகாசம் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய உணவுத்துறை அமைச்சராக நான் பதவியேற்கும்போது தக்காளி, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகிய காய்கறிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது.

ஒரு சிலநேரங்களில் குறிப்பிட்ட காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படுவது இயற்கையானது தான். அதே வேளையில் அத்தியாவசிய உணவுப் பொருள்களைப் பதுக்கி வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டும் வருகிறது. தமிழகத்தின் தேவைக்கு கூடுதலாக கோதுமை வேண்டும் என்று மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழகத்துக்கு கூடுதலாக கோதுமையை வழங்க மத்திய அரசு தயாராக உள்ளது.

அனைத்து மாநிலங்களின் தேவையைப் பூர்த்திசெய்யும் அளவுக்கு போதுமான உணவுப் பொருள்கள் கையிருப்பு உள்ளது. புயலால் பாதிக்கப்பட்ட விசாகப்பட்டினத்துக்கு கூடுதல் உணவுப்பொருள்களை வழங்கவும் மத்திய அரசு தயாராக உள்ளது.

நியாய விலைக்கடைகளில் அனைத்து நாள்களும் மக்களுக்கு தேவையான பொருள்களை வழங்கவேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை:

நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை அனைவரும் பெறவேண்டும். ஒருவருக்கு அதிக தாகம்... அதிக பசி... ...

காரம்

காரம் சுவையுள்ளதாகும். மிளகு, மிளகாய், கடுகு, இஞ்சி, சுக்கு, கருணைக்கிழங்கு, கலவைக்கீரை, வேளைக்கீரை ...