தீவிரமாக திருடுவதும், திருட அனுமதிப்பதும்தான் திராவிட மாடலா?

அறிவாலயம் திமுக அரசு கார்ப்பரேட்டுகளுக்கான அரசு. கமிஷனுக்கான அரசு, தரமற்ற அரசு என்பது மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது.

ரூபாய் ஆயிரம் மதிப்புள்ள பொங்கல் பரிசை தருவதாக தமிழகஅரசு தெரிவித்தது. ஆனால் மக்களுக்குக் கிடைத்ததோ, தரங்கெட்ட பொருட்கள். பல இடங்களில் மக்கள் அதை வாங்க மறுத்தனர். வாங்கிய சிலர் குப்பைகளில் வீசும் அளவிற்கு மோசமான பொருட்களை தமிழக அரசு வழங்கியது. ஆனால் அந்த பழியினை சப்ளை செய்த நிறுவனங்கள் மீது சுமத்தி, அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்போம், அவர்களை பிளாக் லிஸ்ட் செய்வோம், என்றெல்லாம் அறிக்கை தயாரித்தனர்.

தமிழகத்தின் 2.15 கோடி குடும்பங்களுக்கு செய்வதற்காக கொடுக்கப்பட்ட டெண்டரில், ரூ1000 மதிப்புள்ள பரிசில், ஒரு குடும்பத்திற்கு 100 ரூபாய் இழப்பு என்றாலும் கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. இது வெறும் பருப்பு மற்றும் பாமாயில் கணக்குதான் இன்னும் மிளகு, புளி, மசாலா பொருட்கள், மளிகை பொருட்கள், என்ற வகையிலே மேலும் சில நூறு கோடிகள் சுருட்டப்பட்டு இருக்கலாம்.

அப்படி, தரமில்லாத பொங்கல் பரிசு சப்ளை செய்த 6 நிறுவனங்களுக்கு சுமார் ரூ.3.75 கோடி அளவிற்கு அபராதம் விதித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தவறு செய்த எந்த நிறுவனத்தையும் பிளாக் லிஸ்ட் தடைசெய்யவில்லை.

அந்த ஆறு நிறுவனங்களில், தரமற்ற பருப்பு மற்றும் பாமாயில் சப்ளை செய்த அருணாச்சலா இன்பெக்ஸ், நேச்சுரல் ஃபுட் கமர்சியல், இண்டெகிரேடட் சர்வீஸ் பாயிண்ட் ஆகிய 3 நிறுவனங்களுக்கு கிட்டத்தட்ட இரண்டரை கோடி ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 210 கோடிக்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளது. அதற்கு 2.5 கோடி அபராதம் மட்டும் போதும் என்ற முடிவை யார் எடுத்தது?

தரமற்ற பொருட்களை சப்ளை செய்த அதே 3 நிறுவனங்களுக்கு மறுபடியும் அதே பொருட்களான 4 கோடி லிட்டர் பாமாயிலும், ஒரு லட்சம் டன் பருப்பும் வழங்குவதற்கு மீண்டும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது, ஏன்?

தவறு செய்தவர்களுக்கு தண்டனைக்கு பதில் வெகுமதிகள் தருவது தான் திராவிட மாடலா? தீவிரமாக திருடுவதும், திருட அனுமதிப்பதும்தான் திராவிட மாடல் போல… இந்த ஊழல் வெளிச்சம் தான்… அவர்கள் சொன்ன விடியலோ?

தவறுகளைத் திருத்திக் கொள்ளாமல், தரமற்ற பொருளை தந்த அதே நிறுவனத்திற்கு தண்டனை தராமல், சொற்பத் தொகையை அபராதம் விதித்து, மீண்டும் அதே பொருளை சப்ளை செய்ய ஆர்டர் தருவது, சந்தேகத்திற்கு இடமில்லாத தவறு நடப்பதை வெளிச்சப் படுத்துகிறது.

என்றும் தேசப் பணியில்

(K.அண்ணாமலை)

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொ� ...

நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை: உ.பி.,யில் அமைகிறது உ.பி.,யில் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க பிரதமர் ...

ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி; ஜனா� ...

ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ...

மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்� ...

மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் டில்லியில் பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. ...

இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ� ...

இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை ...

ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூ ...

ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் விளக்கிய இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் கிடைத்த வெற்றி குறித்து, 70 ...

அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரல� ...

அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரலாற்று வெற்றி அசாம் பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...