திறப்பு விழாக்களில் கலந்து கொள்ள சம்பளம் தரவேண்டும் அந்த பணம் மக்களின் நல்ல காரியங்களுக்கு செலவு செய்வேன் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி

என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை வாங்குகிறார்களோ அதுபோன்ற தொகை வாங்கிவிட்டுதான் நான் திறப்புவிழாவுக்கு போவேன்’ என்றார் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி.

கேரள மாநிலத்தில் பா.ஜ.க சார்பில் வெற்றி பெற்ற முதல் எம்.பி என்ற பெருமைக்கு சொந்தக்காரர் நடிகர் சுரேஷ் கோபி. அவருக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் எரிவாயுத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சுரேஷ் கோபி இணை அமைச்சராக பதவி ஏற்றபிறகு துறை ஒதுக்கப்படுவதற்கு முன், ‘நான் சினிமாவில் நடிக்க வேண்டும். எனக்கு அமைச்சர் பதவி தேவையில்லை’ எனக்கூறி பரபரப்பை கிளப்பியிருந்தார். அப்போது அவரை பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை மூலம் சமாதானப்படுத்திய நிகழ்வுகளும் அரங்கேறின.

மத்திய அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சுரேஷ் கோபி கேரளாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில் குருவாயூர் மண்டல கமிட்டி சார்பில் அமைச்சர் சுரேஷ் கோபிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அந்த நிகழ்ச்சியில் பேசிய சுரேஷ் கோபி, “இனி இரண்டு ஆண்டுகள் நாம் தேர்தல் பிரசாரம்தான் செய்ய வேண்டும். 2025 அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தல் செமி ஃபைனலாகும். நல்லகாரியங்கள் இன்னும் நிறைய நடக்கும்.

நான் சினிமாவிலும் தொடர்ந்து நடிப்பேன். சுரண்டி பிழைக்க நான் அரசியலுக்கு வரவில்லை. சினிமாவில் இருந்து எனக்கு கிடைக்கும் சம்பளத்தில் 5 முதல் 8 சதவிகிதம் தொகையை நான் நல்லகாரியங்களுக்கு செலவு செய்கிறேன். அதற்கான உரிமை எனக்கு உண்டு. அப்படி வரும் பணத்தை நான் தனிநபர்களுக்கு கொடுக்கமாட்டேன். மக்களுக்கு பயன்படும் வகையில் செலவு செய்வேன். அதற்காக வேறு யாரிடமும் பணம் வசூலிக்கமாட்டேன். ஒருவகையில் மட்டும் பணம் வசூல் நடத்தப்படும். தனியார் திறப்பு விழாக்களுக்கு எம்.பி-யை வைத்து திறக்கலாம் என நினைக்க வேண்டாம். திறப்பு விழாவுக்கு சினிமா நடிகராகத்தான் வருவேன். அதற்கு ஏற்ற சம்பளம்  வாங்கிவிட்டுதான் வருவேன். என்னைப்போன்ற சக நடிகர்கள் திறப்புவிழாவுக்குச் செல்லும்போது எவ்வளவு தொகை வாங்குகிறார்களோ அதுபோன்ற தொகை வாங்கிவிட்டுதான் நான் திறப்பு விழாவுக்கு போவேன்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது  ...

இந்தியாவுடன் நல்ல உறவு உள்ளது – டிரம்ப் பெருமிதம் 'இந்தியாவுடன் தனக்கு நல்ல உறவு இருக்கிறது' என அமெரிக்க ...

வட மாநிலத்தவர் குறித்து அமைச்ச ...

வட  மாநிலத்தவர் குறித்து அமைச்சர் அன்பரசன் சர்ச்சை பேச்சு – அண்ணாமலை கண்டனம் '' வட மாநிலத்தவர்கள் பன்றி குட்டி போட்டது போன்று ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்த ...

சுங்க சாவடிகளில் முறைகேடு மத்திய அரசு நடவடிக்கை தடை செய்யப்பட்ட முகமைகளால் நிர்வகிக்கப்பட்டு வந்த சுங்கச்சாவடிகளின் தடையற்ற ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் ச ...

சத்திஷ்கரில் 30 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை சத்தீஸ்கர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய அதிரடி என்கவுண்டரில் ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங ...

கடந்த 2 ஆண்டுகளில் 1200 சூதாட்ட தளங்கள் முடக்கம் ஆன்லைன் கேமிங்கின் அடிமையாக்கும் தன்மை மற்றும் நிதி இழப்பு ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழ ...

சுங்க கட்டணங்களில் சலுகைகள் வழங்கப்படும் – நிதின் கட்கரி நாட்டின் முக்கிய நகரங்கள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் தரைவழி ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

முடி உதிர்தல் குறைய

வேப்பிலை கிருமிநாசினி . இது சிரிது எடுத்து நீரில் வேகவைத்து . வேகவைத்த ...