புள்ளி விவரங்களை கொண்டு இந்தியாவை தீர்மானிக் காதீர்

 இதற்கு முன் இருந்து புள்ளி விவரங்களை கொண்டு இந்தியாவை தீர்மானிக் காதீர்கள். தற்போதைய அரசின் செயல் பாடுகள் இந்தியாவை உலகரங்கில் முன்னிலைப் படுத்துவதாக அமைந்துள்ளது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

பாரிஸில் உள்ள யுனெஸ்கோ மையத்தில் வெளி நாடுவாழ் இந்தியர்களுக்கு மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரை: பருவநிலை மாற்றம் என்பது சர்வதேச நாடுகளுக்கு எழுந்திருக்கும் மிகமுக்கியமான சவால். அடுத்த 7 ஆண்டுக்குள் 1,75,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்திசெய்வதே எனது அரசின் இலக்கு. எங்களது வளர்ச்சியை, வெறும் புள்ளிவிவரங்களை கொண்டு அல்லாமல், மக்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்தி நாங்களே தீர்மானிப்போம்.

அனைவருக்கும் வீடு, ஒவ்வொரு வீட்டிலும் மின்சாரவசதி, அனைவருக்கும் சுகாதாரமான குடிநீர் வசதி, வாழும் நம்பிக்கையை அனைத்து குழந்தைகளிடத்திலும் ஏற்படுத்துதல், சுத்தமான ஆறு, சுவாசிப் பதற்கு தூய்மையான காற்று, பறவைகள் நிறைந்தகாடுகளை உறுதிசெய்தல் ஆகிய இந்த திட்டங்களுக்கு எனது அரசு முக்கியத்துவம் தந்து வருகிறது. இந்த இலக்கை அடையவேண்டும் என்றால், சரியான கொள்கைகள், வளங்கள் மட்டும் இருந்தால் போதாது. அதற்கும் மேலாக அறிவியலின் சக்தி நம்மிடம் இருப்பது அவசியம். இதற்கு முன்பு இருந்த புள்ளி விவரங்களை கொண்டு இந்தியாவை தீர்மானிக்காதீர். தற்போதைய அரசின் செயல்பாடுகள், உலகரங்கில் இந்தியாவை முன்னிலைப் படுத்துவதாக உள்ளது. இதற்கு நாட்டுமக்களின் பங்களிப்பும் பெரியளவில் உள்ளது. வெளிநாட்டு வாழ் இந்தியர்களும், அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்கவேண்டும். இவ்வாறு மோடி பேசினார்.

பிரான்சில் 4 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திரமோடி, நேற்று அந்நாட்டு தொழிலதிபர்களை சந்தித்துபேசினார். அப்போது, மேக் இன் இந்தியா திட்டத்தை பற்றியும், இந்தியாவில் முதலீடுசெய்வதால் ஏற்படும் லாபங்கள் குறித்தும் அவர் விளக்கினார். குறிப்பாக, நாட்டின் உள் கட்டமைப்புபணிகள், பாதுகாப்புத் துறை ஆகியவற்றில், பிரான்ஸ் முதலீடுசெய்ய வேண்டும் என்று, தொழில்நுட்ப உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். இந்த சந்திப்பின் போது, மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில், பிரான்ஸ் அணு உலை அமைப்பது, நீண்ட காலமாக பேசப்பட்டு வரும் ரபேல் போர்விமான விவகாரத்தில் முடிவை எட்டுவது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

பிரான்ஸ் நாட்டைசேர்ந்த அரேவா என்ற நிறுவனம், மகாராஷ்டிர மாநிலம் ஜெய்தாப்பூரில் 6 அணு உலைகளை அமைக்க உள்ளது. இதன்மூலம் 10 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

குங்குமப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி, கண்நோய், காதுநோய், கபநோய், ஜுரம், தாது நஷ்டம், தாகம், மேக நோய், ...

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான ...