பெருநெருஞ்சில் மற்றும் சிறுநெருஞ்சில்

 முட்கள் உள்ள இந்தச் செடி தரையோடு தரையாகப் படர்ந்து காணப்படும். இது பசுமையான புல் வெளிகளிலும் புல்லோடு புல்லாகப் படர்ந்திருக்கும். மஞ்சள் நிறம் கொண்ட பூக்களுடனும், நட்சத்திர வடிவம் கொண்ட காய்களுடனும் இது காணப்படும்.

உடல் உஷ்ணத்தைத் தனித்துக் குளிர்ச்சியை உண்டாக்கும் தன்மை கொண்டதாகும். களைப்பை போக்குவதுடன் உடம்பில் தேங்கும் கெட்ட நீரினை வெளியேற்றும் தன்மை இதற்கு மிகவுண்டு. நம்முடலில் சேரும் அதிகப்படியான அமிலச்சத்துகளை வெளியேற்றுவதில் நெருஞ்சி பெருந்துணை புரிகிறது.

சிறுநீரகம் சம்பந்தமாக ஏற்படும் அனைத்து நோய்களையும் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

நெருஞ்சில் செடியின் வேர், இலை அனைத்தையும் சுத்தமாக கழுவிட்டு கல்லுரலில் இட்டு நன்கு இடித்துச் சாரெடுத்துப் பருகி வந்தால் சிறுநீரகம் சம்பந்தமான அனைத்து நோய்களையும் குணப்படுத்தி விடலாம்.

நெருஞ்சில் செடியை வேருடன் எடுத்து வந்து சுத்தம் செய்து இடித்து நன்கு பிழிந்து ஒரு அவுன்ஸ் வீதம் தினசரி இரண்டு வேளை, மோர் அல்லது பாலுடன் கலந்து ஒரு வாரம் உட்கொண்டால் சிறுநீருடன் இரத்தம் கலந்து போவது குணமாகும்.

சிறுநெருஞ்சில் இலைகளை நெல்லிக்காயளவு அரைத்துக் காலை வேளையில் உள்ளுக்குச் சாப்பிட்டு வந்தால், மூளையும் நரம்பு மண்டலமும் மற்றும் எல்லா ஹார்மோன்களும் தூண்டிவிடப்பட்டுச் சுரக்கச் செய்யும்.

நெருஞ்சில் நன்கு செயல் புரியும் மூலிகையாகும். நல்ல பசியைக் கொடுக்கும் சக்தி வாய்ந்தது. அமில உற்பத்தி, தானே சமனப்படும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் ...

ஏழைகளுக்கு அதிகாரம் அளித்தவர் எம்:ஜி:ஆர் – பிரதமர் மோடி புகழாரம் தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் ...

சிங்கப்பூர் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு இந்தியா வந்துள்ள சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னத்தை பிரதமர் ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண ...

திறன் மேம்பாட்டில் இந்தியா இரண்டாவது இடம் – பிரதமர் மோடி மகிழ்ச்சி செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பசுமை தொழில்கள் ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ...

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது சம்பள கமிஷன் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 வது சம்பள கமிஷன் ...

திருக்குறளின் போதனைகள் உலகம் ம ...

திருக்குறளின் போதனைகள் உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன – கவர்னர் ரவி 'திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுதும் எதிரொலிக்கின்றன' என, ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குக ...

திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது – பிரதமர் மோடி புகழாரம் திருக்குறள் நுண்ணறிவை வழங்குகிறது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இது ...

மருத்துவ செய்திகள்

இறைச்சியில் உள்ள மருத்துவ குணம்

இறைச்சி உணவில் தசையை வளர்க்கிற சத்தும், பி வைட்டமின் என்னும் உயிர்ச்சத்தும் நிறைய ...

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம்

எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ...

அறிந்து கொள்வோம் : சிறுநீரகம்

மனித உடலின் இடுப்புக்கு மேலே இருபுறமும் விலா எழும்புக் கூண்டுக்குள் மறைந்து இருப்பவை ...