தீவிரவாதிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் தனிமைப் படுத்த வேண்டும்.

 தீவிரவாதிகளையும், அவர்களின் ஆதரவாளர்களையும் தனிமைப் படுத்த வேண்டும். முன்பு நாம் தீவிரவாதத்தைப் பற்றி பேசிய போது அதை சட்டம் – ஒழுங்கு பிரச்சினையாகவே பொதுவாக மக்கள் கருதினார். ஆனால், இப்போது அது மனிதசமுதாயத்துக்கு எவ்வளவு பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது என்பதை உணர்ந்து கொண்டு ள்ளோம்.

எனவே, தீவிரவாதத்துக்கு எதிராக நாம் அனைவரும் ஒன்றிணையவேண்டும். தீவிரவாதிகளையும், அவர்களை ஆதரிப்பவர்களையும் முற்றிலுமாக தனிமைப் படுத்த வேண்டும்.

மும்பை தாக்குதல் தீவிரவாதி லக்வியை சமீபத்தில் ஜாமீனில் விடுவித்த , தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகளுக்கு நாம் நெருக்கடி அளிக்கவேண்டும். அணு ஆயுதங்கள்தயாரிப்பு கூடாது என்பதில் உலகநாடுகள் எவ்வளவு தீவிரமாக உள்ளனவோ, அதேபோன்ற தீவிரத்தை தீவிரவாத இயக்கங்களை ஒழிப்பதிலும் காட்டவேண்டும். தீவிரவாதிகள் வளர்வது என்பது அணு ஆயுத உற்பத்திபோன்று உலகுக்கே பெரிய கேடுகளை விளைவிக்கும்.

தீவிரவாதம் என்பது என்ன என்பதை வரையறை செய்யும் நடவடிக்கை நீண்டநாட்களாக நிலுவையில் உள்ளது. தீவிரவாதம் என்பது என்ன என்பதை வரையறைசெய்து ஐ.நா. தீர்மானம் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் நாம் தீவிரவாதத்துக்கு எதிராக மக்களை எளிதாக ஒன்றுதிரட்ட முடியும். தீவிரவாதம் குறித்த இந்தியாவின் நிலைப்பாட்டைதான் ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலும் கொண்டுள்ளார். என்று பெர்லினில் நேற்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கலுடன் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தபோது பிரதமர் பேசினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

துத்தியின் மருத்துவக் குணம்

இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ...