”வேற்றுமையில் ஒற்றுமையே நம் பலம். நமக்குள் உள்ள வேற்றுமைகளை மதிப்போம்; இணைந்து நல்லிணக்கத்துடன் வாழ்வோம்,” என, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் குறிப்பிட்டார்.

மஹாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டில் உள்ள கல்லுாரி ஒன்றில், குடியரசு தினத்தையொட்டி நேற்று நடந்த நிகழ்ச்சியில், ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார்.

தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியதாவது:

குடியரசு தினம் என்பது வெறும் கொண்டாட்டம் மட்டும் அல்ல. அது நாட்டுக்கு நம் கடமைகளை நினைவுபடுத்துவதாகும். பல நாடுகளில் பன்முகத்தன்மை உள்ள மக்கள் வாழ்கின்றனர்.

ஆனால், அங்கெல்லாம் மோதல் உள்ளன. பாரதத்தில் மட்டும்தான், வேற்றுமையில் ஒற்றுமை என்பதை வாழ்க்கையின் இயற்கையான ஒன்றாக நாம் ஏற்றுள்ளோம்.

ஒவ்வொருவருக்கும் என தனிச் சிறப்புகள் இருக்கும். அதே நேரத்தில் மற்றவர்களிடமும் நாம் நல்லவர்களாக இருக்க வேண்டும். நம் அனைவரின் வாழ்க்கையும், மற்றவர்களுடன் இணைந்த ஒன்று.

உங்கள் குடும்பம் மகிழ்ச்சியாக இல்லாவிட்டால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அதுபோலவே, நம் சுற்றுப்புறத்தையும், நாட்டையும் பார்க்க வேண்டும்.

நம் தேசியக் கொடியில் உள்ள தர்மசக்கரம், சமத்துவம், சுதந்திரம், சகோதரத்துவம் போன்றவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறது.

தனிப்பட்ட ஒவ்வொருவரும் வளர்ச்சியை காண்பதே, நாட்டின் வளர்ச்சி. நாம் வாழ்க்கையில் முன்னேறும்போது, மற்றவர்கள் முன்னேறவும் உதவிட வேண்டும்.

நாம் எவ்வளவு சம்பாதிக்கிறோம் என்பது முக்கியமல்ல. மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுக்கிறோம் என்பதே முக்கியம். இதையே நம் தேசியக் கொடி, அதில் உள்ள வண்ணங்கள், அதில் இடம்பெற்றுள்ள தர்மசக்கரம் ஆகியவை நமக்கு உணர்த்துகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொ� ...

நாட்டின் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை: உ.பி.,யில் அமைகிறது உ.பி.,யில் 6வது செமி கண்டக்டர் தொழிற்சாலை அமைக்க பிரதமர் ...

ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி; ஜனா� ...

ஆபரேஷன் சிந்தூர்’ வெற்றி; ஜனாதிபதி திரவுபதி முர்மு உடன் முப்படை தளபதிகள் சந்திப்பு 'ஆபரேஷன் சிந்தூர்' திட்டம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, டில்லியில் ...

மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்� ...

மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டம் டில்லியில் பாதுகாப்பு துறைக்கான அமைச்சரவை குழு கூட்டம் நடைபெற்றது. ...

இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ� ...

இந்திய வீரரை ஒப்படைத்தது பாகிஸ்தான் பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை ...

ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூ ...

ஆபரேஷன் சிந்தூர்: 70 நாடுகளின் தூதரக அதிகாரிகளிடம் விளக்கிய இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையில் கிடைத்த வெற்றி குறித்து, 70 ...

அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரல� ...

அசாம் பஞ்சாயத்து தேர்தலில் வரலாற்று வெற்றி அசாம் பஞ்சாயத்து தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு கிடைத்த ...

மருத்துவ செய்திகள்

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...