குஜராத் மாடல் தவறென்றால் , வதேராமாடல் தான் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா

 லோக் சபா தேர்தலில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு பாஜக வெற்றிபெற்றது என்று கூறிய ராகுல்காந்தி வாக்களித்த மக்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் நேற்று காங்கிரஸ் சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் ராகுல், சோனியா, மன்மோகன் உள்ளிட்டோர் பேசினர். ராகுல் பேசுகையில் லோக் சபா தேர்தலில் மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிடம் பாஜக பணம் வாங்கிக்கொண்டு வெற்றி பெற்றதாக விமர்சித்தார். இதற்கு மத்திய அமைச்சரும், பாஜ மூத்த தலைவர்களில் ஒருவருமான ரவிசங்கர் பிரசாத் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், லோக்சபா தேர்தலில் வாக்களித்த மக்களை ராகுல்காந்தி அவமானப்படுத்தி விட்டார். கார்ப்பரேட் நிறுவனங்களிடம் காசு வாங்கிக்கொண்டு பாஜக வெற்றி பெற்றதாக அவர் குற்றம் சாட்டுகிறார். இதற்காக அவர் வாக்களித்த மக்களிடம் மன்னிப்புகேட்க வேண்டும். ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியாதவர்கள் தற்போது இவ்வாறு கூறுவதா? ராகுல் காந்தியை எத்தனை முறை காங்கிரஸ் அறிமுகம்செய்தது என்று அவர்களால் கூற முடியுமா? குஜராத் மாடலை ராகுல் விமர்சிக்கிறார். அப்படியானால் வதேராமாடல் தான் வளர்ச்சிக்கு வழிவகுக்குமா என்றும் ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார். –

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

ஆவாரம் பூ | ஆவாரம் பூவின் மருத்துவக் குணம்

உடல் பொன்னிறமாக ஆவாரம் பூ மற்றும் பருப்பு வெங்காயம் சேர்த்து சமையல் பாகத்தில் கூட்டு ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

தியானம் என்றால் என்ன?

தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ...