வங்க தேசத்துடன் எல்லைப்பகுதிகளை பரிமாறிகொள்ளும் மசோதா

 வங்க தேசத்துடன் எல்லைப்பகுதிகளை பரிமாறிகொள்ளும் மசோதா மாநிலங்களவையில் நேற்று நிறைவேறியது. எல்லைப்பகுதிகளை இரு நாடுகள் இடையே மாற்றம் செய்வதற்காக கடந்த 41ஆண்டுகளாக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் இந்த வரலாற்று சிறப்பு மிக்க மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.

கடந்த 1947ம்ஆண்டு இந்தியா-வங்கதேசம் நில எல்லை உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.இந்த உடன்படிக் கையை மேற்கொள்வதற்கான அரசியலமைப்பின் 119வது திருத்த மசோதா பல ஆண்டுகளாக நிறைவேறாமல் இருந்தது. இந்த மசோதா மாநிலங்களவையின் 181 உறுப்பினர்களின் ஆதரவுடன் நேற்று நிறைவேறியது.

இந்த மசோதா மக்களவையில் இன்று கொண்டு வரப்படுகிறது.

இதுகுறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் கூறுகையில் இந்த மசோதா நிறைவேறிய தருணம் வரலாற்று சிறப்பு மிக்கது.41ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொண்ட உடன்படிக் கையை நாம் செயல்படுத்த இருக்கிறோம். இந்த மசோதாவிற்கு அனைவரும் ஆதரவினை அளித்திருக்கிறார்கள். எல்லை பகுதிகளில் உள்ள இடங்களை இருநாடுகள் இடையே பரிமாறிகொள்வது தொடர்பாக அசாம் பகுதியையும் சேர்க்க வேண்டும் என கூறப்பட்டது.அந்த கோரிக் கை ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது என்றார்.

இந்த மசோதா நிறைவேறியதன் மூலம் இருநாடுகளும் பலன் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.

எல்லை பகுதி இடங்களை பரிமாறிகொள்வது தொடர்பான மசோதாவில் அசாம்,மேற்கு வங்காளம்,திரிபுரா, மேகாலயா, ஆகிய மாநில எல்லைப்பகுதிகள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...

தொண்டை சதை அழற்சி நோய் (Tonsillitis)

டான்சிலிட்டிஸ்' (Tonsillitis) என்பதன் பெயர்தான் தொண்டை அழற்சி நோய். இது. தொண்டையின் சதையை ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...